1 - திருமுருகாற்றுப்படை | னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் | 20 | துணையோ ராய்ந்த விணையீ ரோதிச் செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன் | 25 | மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக் |
18. பொலம்புனையவிரிழை : "பொலம்புனை யவிரிழை கலங்கலம் புனன்மணி" (பரி16 : 6) இழை - இழைக்கப்பெற்றஅணி.தேவர்களும்செயற்கையணிகளை அணிவரென்பது இங்கே உணரற்பாலது. "பணிகள் செய்வார் மயன் முதலியோர்; ‘நாவலொடு........... இழை' என்றார் பிறரும்" (சீவக. 2811, ந.)பெயரிய வென்பது பெயரடியாகப் பிறந்தவினை; இ.கொ. சூ. 68, உரை, மேற். 21. செங்கால் வெட்சி: "செங்கால் வெட்சியு நரந்தமு நாகமும்" (மணி. 3 : 161 - 2) 23. தெய்வவுத்தி: ‘தெய்வவுத்தி யென்னும் பூண்' (கலித். 96 : 13, ந.) தெய்வவுத்தியும் வலம்புரியும் கூந்தலில் அணியப்படுதல்: "தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி......... மையீ ரோதிக்கு மாண்புற வணிந்து" (சிலப். 6 : 106 - 8) 24. மு. "திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்" "(நற். 62 : 6), "தேங்கமழ் திருநுதற் றிலகந் தைஇயும்" (அகநா. 389 : 3.) தேங்கமழ் திருநுதல்: "தேமூ ரொண்ணுதல்" (குறுந். 22 : 5) 25. மகரப்பகுவாய்: "எறிமகர வலிய மணிதிகழ் நுதலியர்" (பரி. 10:77); "பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை" (.கலித்54 : 6) 26. "இலக்கணமெல்லாம் முற்றச்செய்தகுழல் என்றது திருமுருகாற்றுப்படையில், ‘துவரமுடித்த துகளறு முச்சி' என்பதற்கு முற்ற முடித்த வுச்சியெனப் பொருள்கொண்டவா றுணர்க" (தஞ்சை. 7, உரை) 28. மருதினொள்ளிணர்: "தேங்கமழ் மருதிணர்" (முருகு. 34) 26-8. "செருகல் - செருகுதல் ; ‘துவர....................மருதின்' எனத்
|