516
கொழும்பல்குடிச் செழும்பாக்கத்துக்
குறும்பல்லூர் நெடுஞ்சோணாட்டு
வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
30நெல்லொடு வந்த வல்வாய்ப் பஃறி
பணைநிலைப் புரவியி னணைமுதற் பிணிக்குங்
கழிசூழ்படப்பைக் கலியாணர்ப்
பொழிற்புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
35மதிசேர்ந்த மகவெண்மீ
னுருகெழுதிற லுயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
யிருகாமத் திணையேரிப்
40புலிப்பொறிப் போர்க்கதவிற்
றிருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
வறநிலைஇய வகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
45யாறுபோலப் பரந்தொழுகி

28. " குறும்ப லூரயாஞ் செல்லு மாறே " (நற். 9 : 12)

29. " வெண்க லுப்பின் கொள்ளை சாற்றி " (நற். 4 : 8 ; அகநா. 140 : 3) ; " தெண்கழி விளைந்த வெண்க லுப்பின், கொள்ளை சாற்றிய " (அகநா. 159 : 1 - 2)

29 - 30. உப்பிற்கு விலையாக நெல்லைக் கொள்ளுதல் : " உப்பை மாறி வெண்ணெற் றரீஇய " (குறுந். 269 : 5) ; " நெல்லி னேரே வெண்க லுப்பென " (அகநா. 140 : 7)

39. " இருகாமத்திணையேரி போலும் குளங்களிலும் .............விளையாடி " (தொல்.கற்பு. சூ. 50, ந.)

"இக்குண்டமிரண்டிற்கும் இவ்வுலகத் தின்புறலும், போக பூமியிற் பிறத்தலும் நிரனிறை யாக்கலுமொன்று ; அவற்றை, ‘ இருகாமத்திணையேரி' என்றார் பட்டினப்பாலையிலும் " (சிலப். 9 : 54 - 64, அடியார்.)

40. புலிப்பொறி : பட்டினப் 135.

போர்கதவு : மதுரைக். 354, ந. கு - ரை ; சிலப். 10 :7, அரும்பத. அடியார்.

41. " திருநிலைஇய பெருமன்னெயில் " (பட்டினப். 291)