517
யேறுபொரச் சேறாகித்
தேரோடத் துகள்கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
50வெண்கோயின் மாசூட்டுந்
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவி
னவிர்சடை முனிவ ரங்கி வேட்கு
55மாவுதி நறும்புகை முனைஇக் குயிறம்
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கு
முதுமரத்த முரண்களரி
60வரிமண லகன்றிட்டை
யிருங்கிளை யினனொக்கற்
கருந்தொழிற் கலிமாக்கள்
கடலிறவின் சூடுதின்றும்
வயலாமைப் புழுக்குண்டும்
65வறளடும்பின் மலர்மலைந்தும்
புனலாம்பற் பூச்சூடியு
நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு
நாண்மீன் விராய கோண்மீன் போல
மலர்தலை மன்றத்துப் பலருடன் குழீஇக்

44 - 7. " 'சோறு......... ஒழுகி' என்பதோவெனின், யாறென்ற துணையானே பேரியாறெனக்கொண்டு உலகிறந்தன வாகாமைக்கன்றே, ' ஏறுபொர............... கெழுமி' என்பதாயிற்றென்பது" (தொல். உவம. சூ. 10, பேர்.)

48. நீறாடியகளிறு : கலித். 97 : 9 - 10.

64 - 5. இவ்வடிகள் , வஞ்சிப்பாவிற் கலியடி வந்ததற்கு மேற்கோள் ; தொல். செய். சூ. 111, இளம் ; இ - வி. அடியோத்து, சூ. 8. யா - கா. ஒழிபு. 4, உரை ; இ - வி. சூ. 745, உரை.

தொல். செய். சூ. 108, பேர். மேற்.

67. நீனிற விசும்பு முருகு . 116, குறிப்புரை.

வலனேர்பு திரிதரு :முருகு. 1.