518
70கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டிப்
பெருஞ்சினத்தாற் புறக்கொடாஅ
திருஞ்செருவி னிகன்மொய்ம்பினோர்
கல்லெறியுங் கவண்வெரீ இப்
புள்ளிரியும் புகர்ப்போந்தைப்
75 பறழ்ப்பன்றிப் பல்கோழி
யுறைக்கிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல்விளை யாடக்
கிடுகுநிரைத் தெஃகூன்றி
நடுகல்லி னரண்போல
80நெடுந்தூண்டிலிற் காழ்சேர்த்திய
குறுங்கூரைக் குடிநாப்ப
ணிலவடைந்த விருள்போல
வலையுணங்கு மணன்முன்றில்
வீழ்த்தாழைத் தாட்டாழ்ந்த
85வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்
சினைச் சுறவின் கோடுநட்டு
மனைச்சேர்த்திய வல்லணங்கினான்

78. பெரும்பாண். 119 - 20, குறிப்புரை.

78 - 9. " பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல், வேலூன்று பலகை " (அகநா. 67 : 9 - 11, 131 : 10 - 12)

82 - 3. நிலவு மணலுக்கு : பொருந. 213, குறிப்புரை.

85. வெண்கூதாளம் : முருகு. 192.

கூதாளியென்பது அம்முப்பெற்று இகரங்கெட்டும், பின் அத்துப்பெற்று மகரங்கெட்டும் வருதற்கு இவ்வடிகள் மேற்கோள் ; தொல் ; உயிர். சூ. 44, .

86 - 7, " சுறவ முண்மருப் பணங்கயர் வனகழிச் சூழல் " (பெரிய. திருக்குறிப்பு. 7) ; " விருப்பின் மீன்கவர் வினைஞர் கோட்சுறா, மருப்பினாடலும் வருதன் மாண்புணர்ந், தொருப்பட் டீர்ம்புன் லும்பற் போற்றித்தங், கருத்து வாய்ப்பது கருங்க டற்பறம் " (தணிகைப். திருநாட்டுப். 136) ; " புறவுக் கோட்டஞ் செயும்வனப்பிற பூவை மொழியார் விழிதான்வாழ், இறவுக் கோட்டுக் கடல்பணிக்கு மெழிலா லவர்நாட்டினரிறைஞ்சும், சுறவுக் கோட்டுட் கடலரசன் றோன்றி வரங்க ளினி