| மடற்றாழை மலர்மலைந்தும் பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும் | 90 | புன்றலை யிரும்பரதவர் பைந்தழைமா மகளிரொடு பாயிரும் பனிக்கடல் வேட்டஞ் செல்லா துவவுமடிந் துண்டாடியும் புலவுமணற் பூங்கானன் | 95 | மாமலை யணைந்த கொண்மூப் போலவுந் தாய்முலை தழுவிய குழவி போலவுந் தேறுநீர்ப் புணரியோ டியாறுதலை மணக்கு மலியோதத் தொலிகூடற் றீதுநீங்கக் கடலாடியு | 100 | மாசுபோகப் புனல்படிந்து மலவ னாட்டியு முரவுத்திரை யுழக்கியும் பாவை சூழ்ந்தும் பல்பொறி மருண்டு மகலாக் காதலொடு பகல்விளை யாடிப் பெறற்கருந் தொல்சீர்த் துறக்க மேய்க்கும் | 105 | பொய்யா மரபிற் பூமலி பெருந்துறைத் துணைப்புணர்ந்த மடமங்கையர் பட்டு நீக்கித் துகிலுடுத்து மட்டுநீக்கி மதுமகிழ்ந்து மைந்தர் கண்ணி மகளிர் சூடவு |
தருளும், நறவுக் கோட்டு மலர்ப்புன்னை ஞாழற் பொதும்ப ரெவ்விடனும் " (ஆனைக்காப். நாட்டு. 96) " இனி , நெய்தனிலத்தில் நுளையர்க்கு வலைவளந் தப்பின் அம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக்கோடு நட்டுப் பரவுக்கடன் கொடுத்தலின் ஆண்டு வருணன் வெளிப்படுமென்றார் ; அவை, ' சினைச்............வல்லணங்கினான்' எனவும் வரும் " (தொல். அகத்திணை . கு. 5. ந.) 92. பாயிரும் பனிக்கடல் : பரி. 5 : 1.கடல் வேட்டம் : எல்லிமிழ் பனிக்கடன் மல்குசுடர்க் கொளீஇ, எமரும் வேட்டம் புக்கனர் " (நற். 67 : 8 -9) ; " பெரும்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் " (அகநா. 140 : 1) 95 - 6. " தாய்முலை தழுவிய குழவி போலவு, மாமலை தழுவிய மஞ்சு போலவும் " (சீவக. 100) 101. அலவனாட்டுதல் : குறுந் . 303 : 5 - 7, 316 : 5 - 6. 103 - 5. பெரும்பாண். 387 - 9.
|