110 | மகளிர் கோதை மைந்தர் மலையவு நெடுங்கான் மாடத் தொள்ளெரி நோக்கிக் கொடுத்திமிற் பரதவர் குரூஉச்சுட ரெண்ணவும் பாட லோர்த்து நாடக நயந்தும் வெண்ணிலவின் பயன்றுய்த்துங் | 115 | கண்ணடைஇய கடைக்கங்குலான் மாஅகாவிரி மணங்கூட்டுந் தூஉவெக்கர்த் துயின்மடிந்து வாலிணர் மடற்றாழை வேலாழி வியன்றெருவி | 120 | னல்லிறைவன் பொருள்காக்குந் தொல்லிசைத் தொழின்மாக்கள் காய்சினத்த கதிர்ச்செல்வன் றேர்பூண்ட மாஅபோல வைகறொறு மசைவின்றி | 125 | யுல்குசெயக் குறைபடாது வான்முகந்தநீர் மலைப்பொழியவு மலைப்பொழிந்தநீர் கடற்பரப்பவு மாரிபெய்யும் பருவம்போல நீரினின்று நிலத்தேற்றவு | 130 | நிலத்தினின்று நீர்ப்பரப்பவு |
109 -10. மதுரைக். 264 - 6, ந. குறிப்புரை. பரி. 6 : 16, உரை ; கலித். 66 : 15 - 6; சீவக. 2119. 112. " பரதவர், திண்டிமில் விளக்க மெண்ணும் " (நற். 372 : 11 - 2) 113. " நாடகங் கண்டு பாடற் பான்மையிற், கேள்வி யின்னிசை கேட்டு " (மணி. 25 : 82 - 3) ; ஆடல் கண்டும் பாடல் கேட்டும் " (பெருங். 3. 23 : 6) ; " பொன்னார் கூத்து மன்னார், நாவல ரமுதமன்ன பாடலு நாக நாட்டுக் , காவலன் கண்டு கேட்டுக் களிமதுக் கடலிலாழ்ந்தான் " (திருவிளை .1 :3) ; " அன்புறு கீதங் கேட்டு நாடகங் கண்டமர்ந்தும் " (வாயு. காலவியல்பு. 4) 114. நெடுநல் . 95, குறிப்புரைகு, 119. வேலாழி : " வேலாழி சூழுலகில் " (திணைமாலை. 62) 125. " உல்குடைப் பெருவழி" (பெரும்பாண். 81)129. (பி - ம்.) ' ஏறவும் '
|