| மளந்தறியாப் பலபண்டம் வரம்பறியாமை வந்தீண்டி யருகடிப் பெருங்காப்பின் வலியுடை வல்லணங்கினோன் | 135 | புலிபொறித்துப் புறம்போக்கி மதிநிறைந்த மலிபண்டம் பொதிமூடைப் போரேறி மழையாடு சிமைய மால்வரைக் கவாஅன் வரையாடு வருடைத் தோற்றம் போலக் | 140 | கூருகிர் ஞமலிக் கொடுந்தா ளேற்றை யேழகத் தகரோ டுகளு முன்றிற் குறுந்தொடை நெடும்படிக்காற் கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற் புழைவாயிற் போகிடைகழி | 145 | மழைதோயு முயர்மாடத்துச் சேவடிச் செறிகுறங்கிற் பாசிழைப் பகட்டல்குற் றூசுடைத் துகிர்மேனி மயிலியன் மானோக்கிற் | 150 | கிளிமழலை மென்சாயலோர் வளிநுழையும் வாய்பொருந்தி யோங்குவரை மருங்கி னுண்டா துறைக்குங் காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன செறிதொடி முன்கை கூப்பிச் செவ்வேள் |
139.(பி - ம்.) ‘ வரைபாய் வருடை' 144. புழைவாயில் : " வாயிலொடு புழையமைத்து" (பட்டினப், 287) இடைகழி : சீவக. 399. 146. செறிகுறங்கு : " சேர்ந்துடன் செறிந்த குறங்கின் " (சிறுபாண். 20) 150. கிளிமழலை : " வாய்திறந்து, கிளிபுரை கிளவியாம் பெறுக " (பொருளியல்) " மாதர்ப் பைங்கிளி மழலை" (பெருங். 2. 12 : 138.) 153 - 4.முல்லை95 ; " சிலம்புகமழ் காந்த ணறுங்குலை யன்ன, நலம்பெறு கையின் " (ஐங். 293 : 1 - 2) ; " கொடிச்சியர் கூப்பி வரை தொழு கைபோ, லெடுத்த நறவின் குலையலங் காந்தள் " , "அடுக்கநா
|