| மரியவும் பெரியவு நெரிய வீண்ட வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகி னீர்நாப் பண்ணு நிலத்தின் மேலு | 195 | மேமாப்ப வினிதுதுஞ்சிக் கிளைகலித்துப் பகைபேணாது வலைஞர்முன்றின் மீன்பிறழவும் விலைஞர் குரம்பை மாவீண்டவுங் கொலைகடிந்துங் களவுநீக்கியு | 200 | மமரர்ப் பேணியு மாவுதி யருத்தியு நல்லானொடு பகடோம்பியு நான்மறையோர் புகழ்பரப்பியும் பண்ணிய மட்டியும் பசும்பதங் கொடுத்தும் புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கைக் | 205 | கொடுமேழி நசையுழவர் நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்னெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப நாடிக் | 210 | கொள்வதூஉ மிகைகொளாது கொடுப்பதூஉங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்துவீசுந் |
192. (பி - ம்.) ' நெளிய வீண்டி ' 185 - 92. இவ்வடிகள், அரும்பொருளிவை யென்பதற்கு மேற்கோள் ; சிலப். 2 : 5 , அடியார். 200. மு. புறநா. 99 : 1 ; ஞானா . 17. 202. " துளங்கெரியவர் புகழ்துளக்கினை " (யா.வி. சூ. 86, மேற்.)206 - 7. "பால்கொள லின்றிப் பகல்போன் முறைகோடாக் கோல்செம்மை " (கலித். 86 : 17 - 8) ; " ஒத்துச் சகத்தனாய் நின்றொழகுஞ் சால்பு தவமே, நுகத்துப் பகலாணி போன்று " (பழ. 95) ; " பகலன்ன வாய்மொழி - நுகத்திற் பகலாணி போன்ற நடுநிலைச்சொல் " (பு. வெ. 157) ; " நுகத்திற் பகலனையாய் " (,தஞ்சை. 48) 210. (பி - ம்.) ' குறைபடாது' 206 - 10. இவை வணிகர் குலுத்திற் குன்றாமைக்கு மேற்கோள் ; சிலப். 2 : 8 , அடியார். 210 - 11. " வாணிகர்க்கு உரிய விரதமாவன, கொள்வதூஉம் மிகை கொள்ளாது கொடுப்பதூஉங்குறை கொடாது பல்பண்டம் பகர்ந்
|