527
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவியு மயங்கி நீரற்
245றறுகோட் டிரலையொடு மான்பிணை யுகளவுங்
கொண்டி மகளி ருண்டுறை மூழ்கி
யந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்குங் கந்துடைப் பொதியிற்
250பருநிலை நெடுந்தூ ணொல்கத் தீண்டிப்
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவு
மருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் றீந்தொடை யோர்க்கும்
255பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துச்
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
யழல்வா யோரி யஞ்சுவரக் கதிர்ப்பவு
மழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவுங்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
260பிணந்தின் யாக்கைப் பேய்மக டுவன்றவுங்
கொடுங்கான் மாடத்து நெடுங்கடைத் துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டி

242. " கராஅங் கலித்த குண்டுகண் ணகழி" (புறநா. 37 : 7)

245. முல்லை. 99, குறிப்புரை.

246 - 7. மாலையில் மகளிர் விளக்கேற்றுதல் : மதுரைக். 555-6- ஆம் அடிகளின் குறிப்புரையைப் பார்க்க.

252. மலர் தூவுதல் : முல்லை. 8 - 10, குறிப்புரை.

253. முதுவாய்க்கோடியார் முழவு : குறுந். 78 : 2.

256. (பி - ம்.) 'நெரிஞ்சியோடு ' (மணி. 12 : 60)

258. " கூகையோ டாண்டலை பாட " (காரைக். திருவாலங்காட்டு மூத்த. 3)

260. பிணந்தின் யாக்கைப் பேய்மகள் : " பேய்மகள்...........நிணந்தின் வாயள் " (முருகு. 51 - 6) ; பேய்மகள், நிணனுண்டு சிரித்த தோற்றம் " (சிறுபாண். 197 - 8)

259 - 60. " பிணஞ்சுமந் தொழுகிய நிணம்படு குருதியிற், கணங்கொள் பேய்மகள் கதுப்பிகுத் தாட " (சிலப். 26 : 209 - 10)