| லொண்சுவர் நல்லி லுயர்திணை யிருந்து பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த் | 265 | தொடுதோ லடியர் துடிபடக் குழீஇக் கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட வுணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து வளைவாய்க் கூகை நன்பகற் குழறவு | | மருங்கடி வரைப்பி னூர்கவி னழியப் | 270 | பெரும்பாழ் செய்து மமையான் மருங்கற மலையகழ்க் குவனே கடறூர்க் குவனே வான்வீழ்க் குவனே வளிமாற் றுவனெனத் தான்முன்னிய துறைபோகலிற் பல்லொளியர் பணிபொடுங்கத் | 275 | தொல்லருவாளர் தொழில்கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் றிறல்கெடச் சீறி மன்னர் மன்னெயில் கதுவு மதனுடை நோன்றாண் மாத்தானை மறமொய்ம்பிற் | 280 | செங்கண்ணாற் செயிர்த்துநோக்கிப் புன்பொதுவர் வழிபொன்ற விருங்கோவேண் மருங்குசாயக் காடுகொன்று நாடாக்கிக் |
265. தொடுதோலடியார் : (பெரும்பாண், 169 ; மதுரைக். 636) 268. " பகலுங் கூவுங் கூகையொடு ", " கூகையொடு கூடிப், பகலுங் கூவு மகலு ளாங்கண் " (புறநா. 356. 2, 362 : 17 -8 ; " பேணா ரகநாட்டு, நன்பகலுங் கூகை நகும் " (பு. வெ. 39) 270. மதுரைக். 176. 269 - 70. மதுரைக். 186 - 7, குறிப்புரை. 271. " ஆலுங் கடறூர்த்தன் மலையகழ்த லிவைவல்லார் " (சீவக. 2165) 271 - 3. உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்புரைத்தற்கு இவை மேற்கோள் (தொல். புறத்திணை .சூ.12, ந.) 278. மதனுடை நோன்றாள் : முருகு. 4. 283. " சேய காடெறிந் தணிநகர் செய்தொழின் மாக்கள் " (திருவிளை. 3 : 26) ; " காடுகொன் றிருநகர்ப்படுப்ப " (காஞ்சிப். நகரேற்று. 185)
|