நான்மறையோர் புகழ் பரப்பியும் (202) - அந்தணர்க்குண்டாம் புகழ்களைத் தாங்கள் அவர்க்கு நிலைபெறுத்தியும்,
புண்ணியம் (204) பண்ணி அட்டியும் (203) - பெரிதாகிய புண்ணியங்களைத் தாங்கள் பண்ணி அவற்றைச் செய்யமாட்டாதார்க்குத் தானம் பண்ணியும்,
அம் : அசை.
பண்ணியமட்டியு மென்றதற்குச் சோற்றை ஆக்கியிட்டு மென்பாருமுளர்.
1 பசு பதம் கொடுத்தும் (203) - விளைந்தநெல்லையும் பறிக்குங்கமுகையும் உணவாகக் கொடுத்தும்,
இதற்கு அரிசியும் கறியுங் கொடுத்து மென்பாருமுளர்.
முட்டா தண் 2 நிழல் வாழ்க்கை (204) - இங்ஙனஞ்செய்யும் அறத்தொழில்கள் முட்டுப்படாத குளிர்ந்த அருளுடனே வாழும் இல்வாழ்க்கையையுடைய நன்னெஞ்சினோர் (207) என்க.
கொடு மேழி நசை உழவர் (205) நெடு நுகத்து பகல் போல (206) நடுவுநின்ற நல் நெஞ்சினோர் (207) - வளைந்த மேழியால் உழவுத் தொழிலை நச்சுதலையுடைய உழவரது நெடிய 3 நுகத்திற்றைத்த பகலாணிபோல நடுவுநிலையென்னுங்குணம் நிலைபெற்ற நன்றாகிய நெஞ்சினையுடைதயோர்,
என்றது, ஆண்டுறையும் 4 வேதவாணிகரை
5 தம (209) பல் பண்டமும் (211) பிற (209) பல் பண்டமும் (211) ஒப்ப நாடி (209) - தம்முடையவாகிய பலசரக்குக்களையும் பிறவாகிய பலசரக்குக்களையும் பொருளொப்ப ஆராய்ந்து,
பரப்புக்குப் போதாது ; அஃது இன்றி யொழியின் அவனுண்ணானென்பது ; அவன் வழியொழிகும் சுரபியைப் பறித்த தனாற் பயனிது " (தக்க. 488, உரை)
3 நுகம் - நுகத்தடி ; பகலாணி - அதன் நடுவே தைத்த ஆணி.
4 " மெய்ந்நிக ரிலாதவன் வேத வாணிகன் " (