| னிளிப்பயி ரிமிருங் குறும்பரந் தூம்பொடு விளிப்பது கவருந் தீங்குழ றுதைஇ நடுவுநின் றிசைக்கு மரிக்குரற் றட்டை | 10 | கடிகவர் பொலிக்கும் வல்வா யெல்லரி நொடிதரு பாணிய பதலையும் பிறவுங் கார்கோட் பலவின் காய்த்துணர் கடுப்ப நேர்சீர் சுருக்கிக் காய கலப்பையிர் கடுக்கலித் தெழுந்த கண்ணகன் சிலம்பிற் | 15 | படுத்துவைத் தன்ன பாறை மருங்கி னெடுத்துநிறுத் தன்ன விட்டருஞ் சிறுநெறி தொடுத்த வாளியர் துணைபுணர் கானவ ரிடுக்கண் செய்யா தியங்குந ரியக்கு மடுக்கன் மீமிசை யருப்பம் பேணா |
7 இவ்வடியின் பாடபேதம்போல் தோன்றும் , "விளிப்பது பயிலுங் குறும்பர்துந் துமியொடு " என்ற அடியை வினைமுற்று வினையெச்சமாதற்கு மேற்கோள் காட்டுவர் ; நன். சூ. 350, மயிலை. 11. பாணிய பதலை : "பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் "(குறுந். 59 : 1 ) 2 - 11. புறநா. 152 : 14 - 8. 11 - 2. மலைபடு. 142 - 4. 13. மலைபடு. 365 ; "காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை " (புறநா. 206 : 10) 3 - 13. "புணர்புரி நரம்பின் றீந்தொடை பழுனிய, வணரமை நல்யா ழிளையர் பொறுப்பப், பண்ணமை முழவும் பதலையும் பிறவுங், கண்ணறுத் தியற்றிய தூம்பொடு சுருக்கிக், காவிற் றகைத்த துறைகூடு கலப்பையர் " (பதிற். 41 : 1 -5); "ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத், தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கி ", " சுவலழுந்தப் பலகாய, சில்லோதிப் பல்லிளைஞர் " (புறநா. 103 : 1 - 2, 139 : 1 - 2) 15. மதுரைக். 278, குறிப்புரை. 16. "விசும்பினுக் கேணி நெறியன்னசின்னெறி " (திருச்சிற். 149) "செல்வர் மனத்தினோங்கி .............அஃகுநெறி " (சீவக. 1416) என்பதற்கு இவ்வடி மேற்கோள். 15 - 6. தொல். கிளவி. சூ. 55, சே ; இ - வி. சூ. 321, மேற். 17 - 8. பெரும்பாண். 39 - 41. 19. மீமிசை, ஒருபொருட் பன்மொழி என்பதற்கு மேற்கோள் ; யா - வி. சிறப்பு.
|