| புனல்கால் கழீஇய மணல்வார் புறவிற் புலம்புவிட் டிருந்த புனிறில் காட்சிக் | 50 | கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ தூமலர் துவன்றிய கரைபொரு நிவப்பின் மீமிசை நல்யாறு கடற்படர்ந் தாஅங் கியாமவ ணின்றும் வருது நீயிருங் கனிபொழி கானங் கிளையொ டுணீஇய | 55 | துனைபறை நிவக்கும் புள்ளின மானப் புனைதார்ப் பொலிந்த வண்டுபடு மார்பின் வனைபுனை யெழின்முலை வாங்கமைத் திரடோண் மலர்போன் மழைக்கண் மங்கையர் கணவன் முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பி | 60 | னிசைநுவல் வித்தி னசையே ருழவர்க்குப் புதுநிறை வந்த புனலஞ் சாயன் |
48. பெரும்பாண். 380. " நீர்கால் கழீஇய வார்மண லெக்கர் (பெருங். 1. 42 : 91) 50. மலைபடு. 569, குறிப்புரை. தொல். புள்ளிமயங். சூ. 17, ந. மேற். 53. சிறுபாண். 143 ; பெரும்பாண். 28. 51 - 3. பெரும்பாண். 427, குறிப்புரை. " மலையி னிழிந்து மாக்கட னோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு போலப், புலவ ரெல்லா நின்னோக்கினரே " (புறநா. 42 : 19 - 21) ; " கடுவரை நீரிற் கடுத்துவர " (பு. வெ. 11) ; " பெய்யு மாரியாற் பெருகு வெள்ளம்போய், மொய்கொள் வேலைவாய் முடுகு மாறுபோல் " (கம்ப. கையடை. 15) 54 - 5. பொருந. 64, குறிப்புரை ; " வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற்போகி " (புறநா. 47 : 1) 57. " வாங்கமை மென்றோன் " (பதிற். 12 : 22) 58. மலைபடு. 424 ; "கொடுங்குழை கணவ" , "திருந்திழை கணவ" , "வாணுதல் கணவ" , "நன்னுதல் கணவ", "ஆன்றோள் கணவ", "நல்லோள் கணவன்", "சேயிழை கணவ", "புரையோள் கணவ" , "சேயிழை கணவ" , "ஒண்டொடி கணவ" (பதிற். 14 : 15, 4 : 11, 38 : 10 , 42 : 7, 55 : 1, 61 : 4, 65 : 10, 70 : 16, 88 : 36, 90 : 50) ; "செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ "(புறநா. 3 : 6) 59. மு. குறிஞ்சிப். 128. 60. "வித்திய பனுவல்" (புறநா. 237 : 5) 61. "வானி நீரினுந், தீந்தண் சாயலன்" (பதிற். 86 : 12 -3);
|