571
காரி யுண்டிக் கடவுள தியற்கையும்
பாயிரு ணீங்கப் பகல்செய்யா வெழுதரு
85 ஞாயி றன்னவவன் வசையில் சிறப்பு
மிகந்தன வாயினுந் தெவ்வர் தேஎ
நுகம்படக் கடந்து நூழி லாட்டிப்
புரைத்தோல் வரைப்பின் வேனிழற் புலவோர்க்குக்
கொடைக்கட னிறுத்தவவன் றொல்லோர் வரவு
90 மிரைதேர்ந் திவருங் கொடுந்தாண் முதலையொடு
திரைபடக் குழிந்த கல்லகழ் கிடங்கின்
வரைபுரை நிவப்பின் வான்றோ யிஞ்சி
யுரைசெல வெறுத்தவவன் மூதூர் மாலையுங்
கேளினி வேளை நீ முன்னிய திசையே,
95மிகுவளம் பழுநிய யாணர் வைப்பிற்
புதுவது வந்தன் றிதுவதன் பண்பே
வானமின்னு வசிவு பொழிய வானா


83. காரியுண்டிக் கடவுள் : சீவக. 670.

84 - 5. பாயிருள்.............ஞாயிறு : " பாயிருள் பருகிப், பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி " (பெரும்பாண். 1 - 2)

" பாயிரு ணீங்கப் பல்கதிர் பரப்பி, ஞாயிறு குணமுதற் றோன்றியா அங்கு " , " மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட, ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றா, ருறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் " (பதிற். 59 : 5 - 6, 64 : 12 - 4)

பகல் செய்யா வெழுதரு ஞாயிறு : பெரும்பாண். 441 - 2, ந. குறிப்புரை.

87. நுகம்படக்கடந்து : "நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி "(குறுந். 80 : 5)

89.கொடைக்கடனிறுத்த : மலைபடு. 543 ; பெரும்பாண். 446, குறிப்புரை.

90. கொடுந்தாண் முதலை : குறிஞ்சிப். 257.

இரைதேர்ந்திவரும் ...............முதலை : " இரைதேர் முதலையும் " (சிலப். 13 :7) ]

91. கல்லகழ் கிடங்கு : மதுரைக். 730, குறிப்புரை.

92. " கோடுறழ்ந் தெடுத்த கொடுங்க ணிஞ்சி " (பதிற். 16 : 1)]

வான்றோ யிஞ்சி : " விண்ணுற நிவந்த பண்ணமை படைமதில் "(பெருங். 3. 4 : 3)