574
காழ்மண் டெஃகங் களிற்றுமுகம் பாய்ந்தென
130வூழ்மல ரொழிமுகை யுயர்முகந் தோயத்
துறுகல் சுற்றிய சோலை வாழை
யிறுகுகுலை முறுகப் பழுத்த பயம்புக்
கூழுற் றலமரு முந்தூ ழகலறைக்
கால மன்றியு மரம்பயன் கொடுத்தலிற்
135காலி னுதிர்ந்தன கருங்கனி நாவன்
மாறுகொள வொழுகின வூறுநீ ருயவை
நூறொடு குழீஇயின கூவை சேறுசிறந்
துண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண்ணரிந்
தரலை யுக்கன நெடுந்தா ளாசினி
140விரலூன்று படுக ணாகுளி கடுப்பக்


129." எடுத்தெறி யெஃகம் பாய்தலிற் புணர்கூர்ந்து, பிடிக்கண மறந்த வேழம் "(முல்லை. 68 - 9)

காழ் மண்டெஃகம் : மதுரைக் . 739, குறிப்புரை ; " மடையமை திண் சுரை மாக்காழ் வேலொடு " , " மாக்காழ் நெடுவேல் " (அகநா. 119 : 13, 368 : 18) ; " வேலே..........இருங்காழொடு.........நிலைதிரிந் தனவே " (புறநா. 97 : 4 - 7)

131. " சோலை வாழை : " சோலை வாழைச் சுரிநுகும்பு " (குறுந். 308 :1)

134. " கால மன்றியு மரம்பயம் பகரும், யாண ரறாஅ வியன் மலை " (புறநா. 116 13 - 4) ; " பருவ மன்றியும் பயன்கொடுப் பறாஅப், பலவு மாவுங் குலைவளர் வாழையு, மிருங்கனி நாவலு மிளமா துளமும் " (பெருங். 2. 20 : 61 - 3) ; " காலமன்றியுங் கனிந்தன கனி ", "தீங்கனி, கால மின்றிக் கனிவது காண்டிரால் " (கம்ப. வனம்புகு. 44, நாடவிட்ட.18)

135. கருங்கனி நாவல் : புறநா. 177 : 11

137." கூவை நூறுங் கொழுங்கொடிக் கவலையும் " (சிலப். 25 : 42) ; " பாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும் " (பெருங். 1. 51 : 23)

138. " உண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை" (மலைபடு. 445) ; " உண்ணுநர்த் தடுத்த, சாரற் பலவின்சுளை " (அகநா. 2 : 2 - 3) 

138 - 9. புண்ணரிந்துக்கன ஆசினி : " கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின் " (மலைபடு. 292) ; " பலாஅம் பழுத்த பசும்புண்ணரியல் " (பதிற். 61 : 1) ; " அள்ளிலைப் பலவி னளிந்துவீழ் சுளையும் " (சீவக. 2109)