| குடிஞை யிரட்டு நெடுமலை யடுக்கத்துக் கீழு மேலுங் கார்வாய்த் தெதிரிச் சுரஞ்செல் கோடியர் முழவிற் றூங்கி முரஞ்சுகொண் டிறைஞ்சின வலங்குசினைப் பலவே | 145 | தீயி னன்ன வொண்செங் காந்தட் டூவற் கலித்த புதுமுகை யூன்செத் தறியா தெடுத்த புன்புறச் சேவ லூஉ னன்மையி னுண்ணா துகுத்தென நெருப்பி னன்ன பல்லிதழ் தாஅய் | 150 | வெறிக்களங் கடுக்கும் வியலறை தோறு மணவில் கமழு மாமலைச் சாரற் றேனினர் கிழக்கின ரூனார் வட்டியர் |
141. " குடிஞை யிரட்டுங் கோடுயர் நெடுவரை " (நன். சூ. 458, மயிலை. மேற்.) ; " குடிஞை யிரட்டுங் குளிர்வரை " (பழ. 246) 140 - 41. பொருந. 210, குறிப்புரை. 143. மலைபடு. 511. 143 - 4. மலைபடு. 11 - 2. 145. மலைபடு. 149 ; முருகு. 43, குறிஞ்சிப் 90, குறிப்புரை ; " கார்த்திகை ...........விளக்கிற் பூத்தன தோன்றி " (கார். 26) ; " வழகிதழ்க் காந்தண்மேல் வண்டிருப்ப வொண்டீ, முழுகியதென் றஞ்சி முது மந்தி - பழகி, யெழுந்தெழுந்து கைநெறிக்கு மீங்கோயே திங்கட், கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று " (ஈங்கோய். 70) ; " தண்காந்த ளம்பூத், தழல்போல விரியும் " (பாண்டிக். ) ; "தோன்றி வில்விளக்கே பூக்கும் " (நள. கலித்தொடர். 28) ; " குழலிசைய வண்டினங்கள் கோழிலைய செங்காந்தட் குலைமேற் பாய, வழலெரியின் மூழ்கினவால் " (யா - வி. சூ. 67, மேற்.) ஈகாரவீறு வேற்றுமைக்கண் இன்பெற்று வந்ததற்கும், இரண்டாம் வேற்றுமை யுருபு அன்ன வென்பதையுங் கொண்டு முடியுமென்பதற்கும் இவ்வடி மேற்கோள் ; (தொல். குற்றியலுகர. சூ. 78, க்ஷ. எச்ச. 13, ந.) 145 - 6. தொல். உவம. சூ. 16, பேர். மேற். 149 -50. மதுரைக். 279 - 84, குறிப்புரை. " பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்த, ராடுகளங் கடுக்கும் " (புறநா. 28 : 13 -4.) 145 - 50. பரிசிற் பொருளானந்தத்திற்கு இவ்வடிகளை மேற்கோள் காட்டுவர் ; யா - வி. ஒழிபு. சூ. 3. 151. அகநா. 107 : 21. 152. ஊனார்வட்டி : " வேட்டுவன் மான்றசை சொரிந்த வட்டியும் " (புறநா. 33 : 1 - 2)
|