576
சிறுகட் பன்றிப் பழுதுளி போக்கிப்
பொருதுதொலை யானைக் கோடுசீ ராகத்
155 தூவொடு மலிந்த காய கானவர்
செழும்பல் யாணர்ச் சிறுகுடிப் படினே
யிரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவி
ரன்றவ ணசைஇ யற்சேர்ந் தல்கிக்
கன்றெரி யொள்ளிணர் கடும்பொடு மலைந்து
160சேந்த செயலைச் செப்பம் போகி
யலங்குகழை நரலு மாரிப் படுகர்ச்
சிலம்படைந் திருந்த பாக்க மெய்தி
நோனாச் செருவின் வலம்படு நோன்றாண்
மான விறல்வேள் வயிரிய மெனினே
165நும்மில் போல நில்லாது புக்குக்
கிழவிர் போல கேளாது கெழீஇச்
சேட்புலம் பகல வினிய கூறிப்
பரூஉக்குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு
குரூஉக்க ணிறடிப் பொம்மல் பெறுகுவி
170ரேறித் தரூஉ மிலங்குமலைத் தாரமொடு


150 - 157. ஆற்றுப்படையுள் ஒருமைச்சொல் பன்மையோடு முடிவதற்கு, ' கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ........இரும்பே ரொக்கலொடு பதமிகப் பெறுகுவிர் ' என்னும் பகுதி மேற்கோள்; தொல். எச்ச. சூ. 66, இளம், சே. ந ; இ - வி. சூ. 300.

158. மலைபடு. 256.

159 - 60. " செந்நீ யொண்பூம் பிண்டி " (மதுரைக். 700 - 701) ; " ஏரியவி ருருவி னங்குழைச் செயலை ", " செந்நீ யொண்பூம் பிண்டி " (குறிஞ்சிப். 105 , 118 - 9) ; " அணிமல ரசோகம் பூத்தன......... அழற்கணை தரித்த போன்றவே " (நைடதம், அன்னத்தைக் கண்ணுற்ற. 36)

162- 3. (பி-ம்.) ' எய்தி னோனாச் செருவின் '

164 . மானவிறல்வேள் மதுரைக். 344.

165. மலைபடு. 491 ; " எங்கோ னிருந்த கம்பலை மூதூ, ருடையோர் போல விடையின்று குறுகி " (புறநா.54 : 1 - 2)

169. ' குரு ' என்னும் பண்புரிச்சொல் நிறத்தையுணர்த்தி நீண்டு வருவதற்கு இவ்வடி மேற்கோள் ; (தொல். உரி. சூ. 5, .)

164 - 9. பெரும்பாண். 103 - 5.