| வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல் குறைவின்று பருகி நறவுமகிழ்ந்து வைகறைப் பழஞ்செருக் குற்றநும் மனந்த றீர வருவி தந்த பழஞ்சிதை வெண்காழ் | 175 | வருவிசை தவிர்த்த கடமான் கொழுங்குறை முளவுமாத் தொலைச்சிய பைந்நிணப் பிளவை பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ வெண்புடைக் கொண்ட துய்த்தலைப் பழனி னின்புளிக் கலந்து மாமோ ராகக் | 180 | கழைவளர் நெல்லி னரியுலை யூழ்த்து வழையமை சாரல் கமழத் துழைஇ நறுமல ரணிந்த நாறிரு முச்சிக் குறமக ளாக்கிய வாலவிழ் வல்சி |
171. (மலைபடு. 522 ; முருகு. 195, குறிப்புரை.) தேக்கட்டேறல் : " தேம்பிழி தேறல் " (குறிஞ்சிப். 155) 172. (பி-ம்.) 'குழைவின்று பருகி' 173. பொருந. 94, குறிப்புரையையும், மதுரைக். 669, குறிப்புரையையும் பார்க்க. 174. அருவிதந்த பழம் : " ஆசினி முதுசுளை கலாவ............இழி தருமருவி " (முருகு.301 - 16) ; " பூநாறு பலவுக்கனி, வரையிழி யருவி யுண்டுறைத் தரூஉம் "(குறுந். 90 : 4 - 5) 176. " முளவுமா வல்சி " (ஐங். 364 : 1, பி - ம்.) முளவுமாத் தொலைச்சிய : " முளவுமாத் தொலைச்சுங் குன்ற நாட " (அகநா. 182 : 8) ; " முளவுமாத் தொலைச்சிய முழுச்சொ லாடவர்" (புறநா. 325 : 6) 177. " முடுவ றந்த பைந்நிணத் தடியொடு " (மலைபடு. 563) 176 - 7. தொல். குற்றியலுகர. சூ .78, இளம். ந. ; இ - வி. சூ. 90, மேற். 179. இன்புளி : "தீம்புளி" (மதுரைக். 318) 181. (பி-ம்.) ' வழையமல்' வழையமை சாரல் : " நாகநெடுவழி " (சிறுபாண். 88) ; " வழையமல் வியன்காடு "(பதிற். 41 : 13) ; " வழையமை நறுஞ்சாரல் " (கலித். 53 : 1 ) ; " வழையம லடுக்கத்து " (அகநா. 328 : 1) 176 - 83. நற். 85 :8 - 11. 179 - 83. இன்புளிக் கலந்து..............குறமகளாக்கிய வல்சி : " எயிற்றிய ரிட்ட வின்புளி வெஞ்சோறு " (சிறுபாண். 175)
|