580
டொருவி ரொருவி ரோம்பினர் கழிமி
னழுந்துபட் டலமரும் புழகமல் சாரல்
220விழுந்தோர் மாய்க்குங் குண்டுகயத் தருகா
வழும்புகண் புதைத்த நுண்ணீர்ப் பாசி
யடிநிலை தளர்க்கு மருப்பமு முடைய
முழுநெறி யணங்கிய நுண்கோல் வேரலோ
டெருவை மென்கோல் கொண்டனிர் கழிமி
225னுயர்நிலை மாக்கற் புகர்முகம் புதைய
மாரியி னிகுதரு வில்லுமிழ் கடுங்கணைத்
தாரொடு பொலிந்த வினைநவில் யானைச்
சூழியிற் பொலிந்த சுடர்ப்பூ விலஞ்சி
யோரியாற் றியவின் மூத்த புரிசைப்
230பராவரு மரபிற் கடவுட் காணிற்
றொழாநிர் கழியி னல்லது வறிது
நும்மியந் தொடுத லோம்புமின் மயங்குதுளி
மாரி தலையுமவன் மல்லல் வெற்பே
யலகை யன்ன வெள்வேர்ப் பீலிக்
235கலவ மஞ்ஞை கட்சியிற் றளரினுங்
கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன
நெடுங்கழைக் கொம்பர்க் கடுவ னுகளினு


218.(பி-ம்.) ' ஓம்பினர் கழிமின் '

நன் - வி. சூ. 380, மேற்.

50 - 218. உயர்திணை யொருமையிற் பன்னை மயங்கியதற்கு இவ்வடிகள் மேற்கோள்; நன். சூ. 379, மயிலை.

219. புழகு : குறிஞ்சிப். 96, குறிப்புரை.

226. மதுரைக். 183, குறிப்புரை.

வில்லுமிழ் கடுங்கணை : "விற்பழுத் துமிழ்ந்த வெய்ய வெந்நுனைப் பகழி " (சீவக. 435) ; " விற்பழுத் துமிழும் வெய்யகணை " (கூர்ம. இராமன் வனம்புகு. 56)

227. மதுரைக். 47, குறிப்புரை ; நெடுநல். 169, குறிப்புரை.

229. (பி-ம்.) ' இயவிற்புரிசை மூத்த '

231. (பி-ம்.) ' தொழாநீர் கழிமின் '

236 - 7. சிறுபாண். 56, குறிப்புரை ; " குரங்கன்னபுன் குறுங்கூளியர் " (புறநா. 136 : 13); அகநா. 206 : 3 - 6.