| நேர்கொ ணெடுவரை நேமியிற் றொடுத்த சூர்புக லடுக்கத்துப் பிரசங் காணினு | 240 | ஞெரேரென நோக்க லோம்புமி னுரித்தன்று நிரைசெலன் மெல்லடி நெறிமாறு படுகுவிர் வரைசேர் வகுந்திற் கானத்துப் படினே கழுதிற் சேணோ னெவொடு போகி யிழுதி னன்ன வானிணஞ் செருக்கி | 245 | நிறப்புண் கூர்ந்த நிலந்தின் மருப்பி னெறிக்கெடக் கிடந்த விரும்பிண ரெருத்தி னிருடுணிந் தன்ன வேனங் காணின் முளிகழை யிழைந்த காடுபடு தீயி னளிபுகை கமழா திறாயினிர் மிசைந்து | 250 | துகளறக் துணிந்த மணிமரு டெண்ணீர்க் குவளையம் பைஞ்சுனை யசைவிடப் பருகி மிகுத்துப்பதங் கொண்ட பரூஉக்கட் பொதியினிர் |
239. சூர்புகலடுக்கம் : " சூருடை யடுக்கத்த "(நற். 359 : 9) ; " சூருறை குன்றிற் றடவரை " (பரி. 19 : 23) 238 - 9. மலைபடு 524 - 5 ; முருகு. 229 - 300. 240. (பி-ம்.) ' ஞெரோவென ' ஞெரேரென : மலைபடு. 579. 242. (பி-ம்.) 'வகுந்தின் கானத்து ' வகுந்து வழியென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; (சிலப். 15 : 14 - 9, அடியார்.) 243. கழுதிற்சேணோன் : குறிஞ்சிப். 40 - 41. 247. வழக்கொடு பட்ட மரபு பிறழவும், செய்யுளின்பம்படின் அவ்வாறு செய்க வென்பதற்கு இவ்வடி மேற்கோள் ; தொல். மரபு. சூ. 1, பேர்.) 248. (பி-ம்.) ' முளிகழை யிசைந்த ' மதுரைக். 302, குறிப்புரை. 249. மிசைதல் வேறுவினைப் பொதுச்சொல் அன்றென்று கூறி இதனை மேற்கோள் காட்டினர் ; தொல். கிளவி. சூ. 46, ந. 250. மணிமருடெண்ணீர் : சிறுபாண். 152, குறிப்புரை. ; மதுரைக் 351, குறிப்புரை. 251. " குவளைப் பைஞ்சுனை பருகி " (புறநா. 132 : 5)
|