582
புட்கை போகிய புன்றலை மகாரோ
டற்கிடை கழித லோம்பி யாற்றநு
255மில்புக் கன்ன கல்லளை வதிமி
னல்சேர்ந் தல்கி யசைத லோம்பி
வான்கண் விரிந்த விடியலேற் றெழுந்து
கானகப் பட்ட செந்நெறிக் கொண்மின்
கயங்கண் டன்ன வகன்பை யங்கண்
260மைந்துமலி சினத்த களிறுமத னழிக்குந்
துஞ்சுமரங் கடுக்கு மாசுணம் விலங்கி
யிகந்துசேட் கமழும் பூவு முண்டோர்
மறந்தமை கல்லாப் பழனு மூழிறந்து
பெரும்பயங் கழியினு மாந்தர் துன்னா
265ரிருங்கால் வீயும் பெருமரக் குழாமு


253. புன்றலைமகார் : மலைபடு. 217.

இவ்வடி , புள் வளையென்னும் பொருளில் வருமென்பதற்கு மேற்கோள்; சீவக. 2591,.

256. மலைபடு. 158.

260 - 61. யானையை விழுங்கும் பாம்பு : " களிறு பாந்தட் பட்டென ", "களிறகப் படுத்த பெருஞ்சின மாசுணம் " (நற். 14 : 8, 261 : 6) " வெண்கோட் டியானை விளிபடத் துழவு, மகல்வாய்ப் பாந்தள் " (அகநா. 68 : 19 - 20); " பரிய களிற்றை யரவு விழுங்கி மழுங்க " (திருஞா. தே.) ; " குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பை " (திருச்சிற். 21) : " களிறென்று பெரிய மாசுணம் .............பெயர்தரு பிருதியெம் பெருமானை " (பெரியதிரு. 1. 2 : 10) ; " புழுங்குவெம் பசியொடு புரளும் பேரரா, விழுங்கவந் தெதிரெதிர் விரித்த வாயின்வாய், முழங்குதிண் கரிபுகும் " , " மதக்கதமா, வடங்கு பேழ்வயிற் றரவு " , " இடிகொள் வேழத்தை யெயிற்றொடு மெடுத்துடன் விழுங்குங், கடிய மாசுணம் " , " பெரிய பாந்தள், மறங்கிளர் மாண யானை வயிற்றின வாக வாய்சோர்ந், துறங்கின " (கம்ப. தாடகை. 11, சித்திரகூட. 4, 35, சேதுபந்தன. 20) ; " கைந்நாக மேமேயு மாநாகம் " (தக்க. 543)

262. சேட் கமழும்பூ : " சேணாறு பிடவம் " (முல்லை. 25)

262 - 3. மலைபடு 282 - 3.

265. (பி-ம்.) ' இருங்கோல் '

259 - 65. கயங்கண்டன்ன.........பெருமரக்குழுாம் : மலைபடு. 47, குறிப்புரை.