584
குறியவு நெடியவு மூழிழிபு புதுவோர்
நோக்கினும் பனிக்கு நோய்வகூ ரடுக்கத்
290 தலர்தாய வரிநிழ லசையினி ரிருப்பிற்
பலதிறம் பெயர்பவை கேட்குவிர் மாதோ
கலைதொடு பெரும்பழம் புண்கூர்ந் தூறலின்
மலைமுழதுங் கமழு மாதிரந் தோறு
மருவி நுகரும் வானர மகளிர்
295வருவிசை தவிராது வாங்குபு குடைதொறுந்
தெரியிமிழ் கொண்டநும் மியம்போ லின்னிசை
யிலங்கேந்து மருப்பி னினம்பிரி யொருத்தல்
விலங்கன் மீமிசைப் பணவைக் கானவர்
புலம்புக் குண்ணும் புரிவளைப் பூசல்
300சேயளைப் பள்ளி யெஃகுறு முள்ளி
னெய்தெற விழுக்கிய கானவ ரழுகை
கொடுவரி பாய்ந்தெனக் கொழுநர் மார்பி
னெடுவசி விழுப்புண் டணிமார் காப்பென
வறல்வாழ் கூந்தற் கொடிச்சியர் பாட


288 - 9. " குறியவு நெடியவுங் குன்று " (சிலப். 27 : 153 ; மணி. 6 : 58)

290. வரிநிழல் : பெருந. 51 ; சிறுபாண். 11 - 2, குறிப்புரை.

292. மலைபடு. 138 - 9, குறிப்புரை.

கலைதொடு பெரும்பழம் : " கலைகை தொட்ட கமழ்சுளைப் பெரும்பழம் " (குறுந். 342 : 1 )

294. (பி-ம்.) 'அருவி நுகக்கும் '

" ஆழருவி யரமகளி ராடுபவே " (கலித். 40 : 23); அமர நாடியர் துன்னியா டிடங்களும் " (கம்ப. பிலநீங்கு. 8)

295 - 6. மதுரைக். 363, குறிப்புரை.

300 - 301. "மொய்த்த முட்டன துடற்றலை துளைப்ப முடுகிக், கைத்தலத்தனிமி ரக்கடிது கன்றிவிசிறும், மெய்த்த மெய்ப்பெரிய கேழலென " (கம்ப. விராதன். 33) ; " மெய்யுருவிய வையுறு முனைமுள்ளை, யெய்யுதறின " (சீகாளத்தி. கண்ணப்ப. 86)

303 - 4. " காஞ்சி பாடி .........காக்கம் வம்மோ காதலந் தோழி, ...........நெடுந்தகை புண்ணே " (புறநா. 281 : 5 - 9) ; " கொய்யாக் குறிஞ்சி பலபாடி - மொய்யிணர்ப், பூப்பெய் தெரிய னெடுந்தகை புண் யாங்காப்ப " (பு. வெ. 79)