| லரசுநிலை தளர்க்கு மருப்பமு முடைய பின்னி யன்ன பிணங்கரி னுழைதொறு | 380 | முன்னோன் வாங்கிய கடுவிசைக் கணைக்கோ லின்னிசை நல்யாழ்ப் பத்தரும் விசிபிணி மண்ணார் முழவின் கண்ணு மோம்பிக் கைபிணி விடாஅது பைபயக் கழிமின் களிறுமலைந் தன்ன கண்கூடு துறுகற் | 385 | றளிபொழி கானந் தலைதவப் பலவே யொன்னாத் தெவ்வ ருலைவிடத் தார்த்தென நல்வழிக் கொடுத்த நாணுடை மறவர் செல்லா நல்லிசைப் பெயரொடு நட்ட கல்லேசு கவலை யெண்ணுமிகப் பலவே |
382. (பி-ம்.) ' முழவுங்கண்ணு மோம்பி ' 384. துறுகல்லிற்கு யானை உவமை : பட்டினப் . 234, குறிப்புரை ; " வேழ, மிரும்பிணர்த் துறுகல் பிடிசெத்துத் தழூஉம் " (ஐங். 239 :1 - 2) 386.ஒன்னாத் தெவ்வர் : மலைபடு. 397 ; பெரும்பாண். 491. பகைவர் தோல்விகண்டு ஆர்த்தல் : பெரும்பாண். 419 ; " வினைவலதிகன், களிறொடு பட்ட ஞான்றை, யொளிறுவாட் கொங்க ரார்ப்பினும் பெரிதே " (குறுந். 393 : 4 - 6) ; " கொன்றுகளம் வேட்ட ஞான்றை , வென்றிகொள் வீர ரார்ப்பினும் பெரிதே " , " எழுவுறழ் திணிதோ ளியறேர்ச் செழிய, னேரா வெழுவ ரடிப்படக் கடந்த , வாலங்கானத் தார்ப்பினும் பெரிதென " , " மொய்வலி யறுத்த ஞான்றைத், தொய்யா வழுந்தூ ரார்ப்பினும் பெரிதே " (அகநா. 36 : 22 - 3, 209 : 4 - 6, 246 : 13 - 4) ; " உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை ................அழுந்தப் பற்றிய யகல்விசும் பார்ப்பெழக், கவிழ்ந்துநிலஞ் சேர வட்டதை " (புறநா. 77 : 9 - 12) 388. செல்லாநல்லிசை : மலைபடு 70, அடிக் ; புறநா. 395 : 19. 387 - 9.நடுகல் : " விழுத்தொடை மறவர் வில்லிடத் தொலைந்தோ, ரெழுத்துடை நடுகல் " (ஐங். 352 : 1 - 2) ; " விழுத்தொடை மறவர் வில்லிட வீழ்ந்தோ, ரெழுத்துடை நடுக லன்னிழல் வதியும், அருஞ்சுரக் கவலை " , " நல்லமர்க் கடந்த நாணுடை மறவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் ", " ஆடவர், பெயரும் பீடு மெழுதி யதர்தொறும், பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் " , " விடுவாய்ச் செங்கணைக் கொடுவி லாடவர், நன்னிலை குறித்த கன்னிலை யதர " ," நல்லிசை நிறுத்த நாணுடை மறவர், நிரைநிலை நடு
|