592
மேம்பட வெறுத்தவவன் றொஃறிணை மூதூ
ராங்கன மற்றே நம்ம னோர்க்கே
யசைவுழி யசைஇ யஞ்சாது கழிமின்
புலியுற வெறுத்ததன் வீழ்பிணை யுள்ளிக்
405கலைநின்று விளிக்குங் கானமூ ழிறந்து
சிலையொலி வெரீஇய செங்கண் மரைவிடை
தலையிறும்பு கதழு நாறுகொடிப் புறவின்
வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த
வளையான் றீம்பான் மிளைசூழ் கோவலர்
410வளையோ ருவப்பத் தருவனர் சொரிதலிற்
பலம்பெறு நசையொடு பதிவயிற் றீர்ந்தநும்
புலம்புசே ணகலப் புதுவி ராகுவிர்
பகர்விரவு நெல்லின் பலவரி யன்ன
தகர்விரவு துருவை வெள்ளையொடு விரைஇக்
415கல்லென் கடத்திடைக் கடலி னிரைக்கும்
பல்யாட் டினநிரை யெல்லினிர் புகினே
பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர் 
துய்ம்மயி ரடக்கிய சேக்கை யன்ன
மெய்யுரித் தியற்றிய மிதியதட் பள்ளித்
420தீத்துணை யாகச் சேந்தனிர் கழிமின்
கூப்பிடு கடக்குங் கூர்நல் லம்பிற்
கொடுவிற் கூளியர் கூவை காணிற்
படியோர்த் தேய்த்த பணிவி லாண்மைக்

ஓம்பாவள்ளல் : மதுரைக். 146, குறிப்புரை.

403.அசைவுழி யசைஇ : பெரும்பாண். 44.

406.மரைவிடை : " மரையான் கதழ்விடை " (மலைபடு. 331)

408 - 9.ஏறுடையினத்த ஆன் : " கறங்குமணி துவைக்கு மேறுடைப் பெருநிரை " (மலைபடு. 573) ; நெடுநல். 4 , குறிப்புரை.

414.துருவையும் வெள்ளையும் : " கொடுமுகத் துருவையொடு வெள்ளை சேக்கும் " (பெரும்பாண். 153)

417.(பி-ம்.) ' விதவையும் '

421 - 2." கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் " (புறநா. 23 : 5 )

423." படியோர்த் தேய்த்த வாண்மை " (பதிற். 79 : 6) ; " படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை " (அகநா. 22 : 5 )