| கொடியோள் கணவற் படர்ந்திரு மெனினே | 425 | தடியுங் கிழங்குந் தண்டினர் தரீஇ யோம்புந ரல்ல துடற்றுந ரில்லை யாங்குவியங் கொண்மி னதுவதன் பண்பே தேம்பட மலர்ந்த மராஅ மெல்லிணரு மும்ப லகைத்த வொண்முறி யாவுந் | 430 | தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்குமர னாரிற் பொலியச் சூடி முரம்புகண் ணுடைந்த நடவை தண்ணென வுண்டனி ராடிக் கொண்டனிர் கழிமின் செவ்வீ வேங்கைப் பூவி னன்ன | 435 | வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த சுவல்விளை நெல்லி னவரையம் புளிங்கூ ழற்கிடை யுழந்தநும் வருத்தம் வீட வகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் |
424. மலைபடு. 400. கொடியோள் கணவன் : (மலைபடு. 58, குறிப்புரை.) 425." பராஅரை வேவை பருகெனத் தண்டி " (பொருந. 104) 429.யானை யாவை முறித்தல் : " பெருங்கை வேழ, மென்சினை யாஅம் பிளக்கும் ", " உரற்கா லியானை யொடித்துண் டெஞ்சிய, யாஅவரிநிழல் " , " அத்த யாஅத்துப், பொரியரை முழுமுத லுருவக் குத்தி ...........தடமருப்பி யானை ", " களிறு.............நிலையுயர் யாஅத் துலையத் குத்தி " (குறுந். 37 : 2 - 3, 232 : 4 - 5, 307: 4 - 6) " நெடுநிலை யாஅ மொற்றி நனைகவுட் படிஞிமிறு கடியுங் களிறே " , " யானைதன், கொன்மருப் பொடியக் குத்திச் சினஞ்சிறந், தின்னா வேனி லின்றுணை யார, முளிசினை யாஅத்துப் பொளிபிளந் தூட்ட " (அகநா. 59 : 8 - 9. 335 : 4 - 7) 430 - 31" மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணி " (புறநா. 264 : 2) திரங்குமரல் : அகநா. 49 : 12, 199 : 7, 327 : 10; சிலப். 11 : 77 435.(பி-ம்.) ' விதவை ' 435 - 6." ஆய்மக ளட்ட வம்புளி மிதவை " (புறநா. 215 : 4) 434 - 5. பெரும்பாண். 194 - 5.
|