594
440பென்னறைந் தன்ன நுண்ணே ரரிசி
வெண்ணெறிந் தியற்றிய மாக்க ணமலை
தண்ணெ னுண்ணிழு துள்ளீ டாக
வசையினிர் சேப்பி னல்கலும் பெறுகுவிர்
விசையங் கொழித்த பூழி யன்ன
445வுண்ணுநர்த் தடுத்த நுண்ணிடி நுவணை 
நொய்ம்மர விறகின் ஞெகிழி மாட்டிப் 
பனிசே ணீங்க வினிதுடன் றுஞ்சிப்
புலரி விடியற் புள்ளோர்த்துக் கழிமின்
புல்லரைக் காஞ்சிப் புனல்பொரு புதவின்
450மெல்லவ லிருந்த வூர்தொறு நல்லியாழ்ப்
பண்ணுப்பெயர்த் தன்ன காவும் பள்ளியும்
பன்னா ணிற்பினுஞ் சேந்தனிர் செலினு
நன்பல வுடைத்தவன் றண்பணை நாடே
கண்புமலி பழனங் கமழத் துழைஇ
455வலையோர் தந்த விருஞ்சுவல் வாளை
நிலையோ ரிட்ட நெடுநாண் டூண்டிற்
பிடிக்கை யன்ன செங்கண் வராஅற்
றுடிக்க ணன்ன குறையொடு விரைஇப்
பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர்

441.(பி-ம்.) ' எள்ளெறிந்து ' ‘ எண்ணெறிந்தது '

442.நுண்ணிழுது : " நீரினு நுண்ணிது நெய்யென்பர் " (நாலடி. 282)

445.(பி-ம்.) ' இடிநுண்ணுவணை '

உண்ணுநர்த்தடுத்த நுண்ணிடி நுவணை : மலைபடு. 138, குறிப்புரை.

448. மலைபடு. 65 - 6, குறிப்புரை.

451." பண்ணுப் பெயர்த்தாங்கு " (பதிற். 65 : 15) 

452.(பி-ம்.) 'சேர்ந்தனிர் '

" பலநாட் பயின்று பலரொடு செல்லினும் " (புறநா. 101 : 2)

454.(பி-ம்.) ' சண்புமலிபழனம் ', 'காண்புமலி ', 'கண்பமல் ' கண்பு :மதுரைக். 172, குறிப்புரை.

கண்புமலி பழனம் : " கழனிக் கண்பு " (பெருங். 2 . 19 : 187)

457 - 8.வராற்றுடிக்கணன்னகுறை : " கொழுமீன் குறைஇய துடிக்கட்டுணியல்(மதுரைக். 320) என்பதன் குறிப்புரையைப் பார்க்க. 

459. பகன்றைக்கண்ணி : (ஐங். 87 : 1 ; பதிற். 76 : 12)