6

பத்துப்பாட்டு

கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
30பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக
வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
35குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர் 
வேங்கை நுண்டா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெரியாக்

திருமுருகாற்றுப்படையுட் செரீஇ யென்பதற்குச் செருகியென உரை கூறியவாறு கண்டுகொள்க" (தஞ்சை. 42, உரை.)

29. "கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே" (சீவக. 1016); ‘கண்ணும் நீர்க்கீழ ரும்பினது சிவப்பினுஞ் சிவந்தன' (சீவக. 1016,.)

30. இணைப்புறு பிணையல் : " இணைத்த கோதை" (முருகு. 200)

31. காதில் அசோகந்தளிரைச் செருகல் : "செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் " (முருகு207), " சாய்குழைப் பிண்டித் தளர் காதிற் றையினாள்", "கடிமலர்ப் பிண்டிதன் காதிற் செரீஇ" (பரி. 11 : 95, 12 : 88)

வேங்கைத்தாதை அணிதல்: "புலியுரு மருளப் பூத்த பூந்துணர் வேங்கை யொள்வீப், பலபறித் துகுத்த தாது பைந்தொடி மகளிர் நீட்ட, வலர்கரத் தேந்தி யம்பொற் சுணங்கெனும் வேங்கை யோடும், குலவவெங்களபக் கொங்கைக் குவட்டின்மேற் செறியப் பெய்தும்" (காஞ்சிப். திருக்கண். 256)

34- 5. நகிலிற்குக் கோங்கரும்பு: "யாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப், பூணகத் தொடுங்கிய வெம்முலை" (சிறுபாண். 25-6), "முலையேர் மென்முகை யவிழ்ந்த கோங்கின்" (குறுந். 254 : 2), "முதிர்கோங்கின் முகையென...... பெருத்தநின் னிளமுலை" (கலித். 56 : 23-4), "கோங்குமுகைத் தன்ன குவிமுலை" (அகநா. 240 : 11), "கோங்கின், முகைவனப் பெய்திய விளமுலை" (புறநா. 336 : 9-10)

37. தளிர்களை அப்புதல்: "பொரிப்பூம் புன்கி னெழிற்றகையொண் முறி, சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி" (நற்.9 : 5-6

35-7. சூளா. சுயம்வர. 79.

24-37."தேங்கமழ் திருநுதல் திலகந் தைஇயும், பல்லிதழெதிர் மலர் கிள்ளி வேறுபட, நல்லிள வனமுலை யல்லியொ டப்பியும்" (அகநா. 389 : 3-5)