| கடவ தறிந்த வின்குரல் விறலியர் தொன்றொழுகு மரபிற் றம்மியல்பு வழாஅ தருந்திறற் கடவுட் பழிச்சிய பின்றை விருந்திற் பாணி கழிப்பி நீண்மொழிக் | 540 | குன்றா நல்லிசைச் சென்றோ ரும்ப லின்றிவட் செல்லா துலகமொடு நிற்ப விடைத்தெரிந் துணரும் பெரியோர் மாய்ந்தெனக் கொடைக்கட னிறுத்த செம்ம லோயென வென்றிப் பல்புகழ் விறலோ டேத்திச் | 545 | சென்றது நொடியவும் விடாஅ னசைதர வந்தது சாலும் வருத்தமும் பெரிதெனப் பொருமுர ணெதிரிய வயவரொடு பொலிந்து திருநகர் முற்ற மணுகல் வேண்டிக் கல்லெ னொக்க னல்வலத் திரீஇ | 550 | யுயர்ந்த கட்டி லுரும்பில் சுற்றத் தகன்ற தாயத் தஃகிய நுட்பத் திலமென மலர்ந்த கைய ராகித் தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் |
536. இன்குரல் விறலியர் : (மலைபடு. 358) 534 - 6. முருகு. 212 , அடிக். ; மதுரை. 217 - 8, குறிப்புரை. 538. அருந்திறற் கடவுள் : (மணி. 6 : 60) " கடவுட் பழிச்ச " (பதிற். 41 : 6) 541. பொருந. 176 ; பெரும்பாண். 466, ந. அடிக் ; புறநா. 165 : 1 - 2, குறிப்புரை. 542. பெரும்பாண். 445. 543. மலைபடு. 89 ; பெரும்பாண். 446, குறிப்புரை ; " பெய்ம்முகி லென்னக் கொடைக்கடனிறுக்கு மிக்குவாகு " (கூர்ம. சூரியன் மரபு. 8) 544." மறம்வீங்கு பல்புகழ் " (பதிற். 12 : 8) ; (திருவாசகம், பொற்சுண்ணம், 18 ; பெரிய. திருநீலகண்டயாழ்ப். 5 ; திருவால. 56 : 9) ; " காந்திருளை வென்று களிவென்றி பாடுவபோல் ", " மின்னைப் புறங்கண்ட வீரப் புகழ்பாட, லென்ன " (சொக்கநாதருலா) 549. கல்லெனொக்கல் : (பெரும்பாண். 12, குறிப்புரை.) 550. உரும்பில் சுற்றம் : "உரும்பில் சுற்றமோ டிருந்தோற் குறுகி" (பெரும்பாண். 447) 553. "மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே" (புறநா. 27 : 6)
|