1 ஐவனம் வெண்ணெல் (115) பால் வார்பு கெழீஇ பல் கவர் வளிபோழ்பு (114) வாலிதின் விளைந்தன (115) - ஐவனநெல்லும் வெண்ணெல்லும் பால்கட்டிச் சிறிது முற்றிப் பலவாய்க் கவர்த்த காற்று ஊடறுக்கப்பட்டு நன்றாக விளைந்தன ;
வார்தல் ஒழுகுதலாதலிற் கட்டுதலையுணர்த்திற்று . கெழுமுதல் ஈண்டு முற்றுதலை யுணர்த்திற்று. பல்கவர்வளியெனவே நாலுகாற்றும் அடித்து முற்றுதல் கூறினார்.
தீ 2 கழை கரும்பு (119) கவிழ் கனைத்து (117) - இனிய கோலாகிய கரும்பு தோடு கவிழ்தலோடே தண்டுதிரண்டு,
அறை குறை வாரா நிவப்பின் (118) - 3 பாத்தி குறைபடுதலுண்டாகாத வளர்ச்சியோடே,
வேல் ஈண்டு தொழுதி இரிவு உற்றென்ன (116) கால் உறு துவைப் பின் இறைஞ்சி (117) - வேற்படைதிரண்ட தானை கெட்டுப்போதலை உற்ற தென்னும்படி காற்று மிகப் படுகின்ற ஆரவாரத்தாலே சாய்ந்து,
அறை உற்று (118) ஆலைக்கு அலமரும் (119) - வெட்டுதலுற்று ஆலையிலேசென்று பயன்படுதற்கு அசையாநிற்கும் ;
கரும்பு திரண்டு நிவப்போடே இறைஞ்சி அலமருமென்க.
நீள் நறு நெய்தல் மை என விரிந்தன (124) - நீண்ட நறியநெய்தல் கருமைதான் வடிவுகொண்ட தென்னும்படியாக அலர்ந்தன ;
நீ முன்னிய திசையைக்கேள் (94) ; வானம்பொழிகையினாலே (97), பெயலொடுவைகிய புனத்து (99) , முசுண்டை மலர்ந்தன (101) ; எண் ஒழுகின (106) ; ஏனல் கொய்பதமுற்றன (108) ; அவரை கொண்டன (110) ; வரகு கவர்வுற்றன(113) ; புறவிலே (120) ; தோரை கொண்டன (121) ; ஐயவி அமன்றன (123) ; இஞ்சி காயங்கொண்டன (126) ; கவலை வீழ்ந்தன (128) ; வாழை (131) பழுத்தன (132) ; உந்தூழ் அலமரும் (133) ; நாவல் உதிர்ந்தன (135) ; உயவை ஒழுகின (136) ; கூவை குழீஇயின (137) ; தேமாத் தடுத்தன (138) ; ஆசினி உக்கன (139) பலவு இறைஞ்சின (144) ; வெண்காற்செறுவிலே (123) ஐவனநெல்லும் வெண்ணெல்லும் விளைந்தன (115) ; கரும்பு அலமரும் (119) ; நெய்தல் விரிந்தன (124) ; இவ்வாறே மிக்க வளம் முற்றுப்பெற்ற புதுவருவாயையுடைய ஊர்களாலே (95) புதிதாகிய தன்மைவந்தது ; அவ்வழியின்பண்பு இத்தன்மைத்து (96) என வினைமுடிக்க.
இஃது 4 ஆற்றினது நன்மையின் அளவுகூறிற்று.