648

தின்னப்பண்ணிப் பாதுகாப்பாரல்லது வருத்துவார்களில்லை ;அவற்றை நுகர்ந்து,

427. ஆங்கு 1 வியம் கொண்மின் - அவ்விடத்து அவர் போகச் சொன்னவீவழியை நுமக்கு வழியாகக் கொண்டுபோவிர் ;

அது அதன் பண்பே - அக்காட்டின் தன்மை அத்தன்மைத்தாயிருக்கும் ;

428. தேன் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் -தேனுண்டாக மலர்ந்த மராவினது மெல்லிய பூங்கொத்தும்,

429. உம்பல் அகைத்த ஒள் முறி யாவும் - யானைமுறித்த ஒள்ளிய தளிர்களை யுடைய 2 யாம் பூவும்,

430 - 31. [தளிரொடு மிடைந்த காமரு கண்ணி, திரங்குமர னாரிற் பொலியச் சூடி :] திரங்கு மரல் நாரில் தளிரொடு மிடைந்த 3 காமரு கண்ணி பொலிய சூடி - உலர்ந்த மரல் நாரிலே தளிர்களோடே நெருங்கக்கட்டின விருப்பம் மருவின கண்ணியை அழகுபெறச் சூடி,

432. முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென - பருக்கையையுடைய மேட்டு நிலத்திடம் விண்ட சிறுவழி மழைபெய்து குளிருகையினாலே,

433. உண்டனிர் ஆடி கொண்டனிர் கழிமின் - அந்நீரைக்குடித்துக் குளித்து வழிக்கு முகந்துகொண்டு போமின் ;

434 - 6. [ செவ்வீ வேங்கைப் பூவி னன்ன, வேய்கொ ளரிசி மிதவை சொரிந்த, சுவல்விளை நெல்லி னவரையும் புளிங்கூழ் :] 

செ வீ வேங்கை பூவின் அன்ன அவரை -சிவந்த பூக்களையுடைய வேங்கைப் பூவினையொத்த நிறத்தையுடைய அவரைவிதை,

வேய் கொள் அரிசி - மூங்கில் தன்னிடத்தே கொண்ட அரிசி,

சுவல் விளை நெல்லின் அரிசி - மேட்டுநிலத்தே விளைந்த நெல்லின் அரிசி,

சொரிந்த மிதவை புளியங்கூழ் -இவற்றைப் புளிக்கரைத்த உலையிலே சொரிந்து ஆக்கின குழைந்த புளியங்கூழை,

437. அதற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட - இராக்காலத்து, காட்டிடத்துப் பகற்பொழுதுவந்த நும் வருத்தம் போம்படி,

438 - 9. [அகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய, புல்வேய் குரம்பைக் குடிதொறும் பெறுகுவிர் :] ஆங்கண் அகலுள் கழி மிடைந்து இயற்றிய புல் வேய் குரம்பை குடிதொறும் பெறுகுவிர் - அவ்விடத்து அகன்ற ஊரிடத்துக் கழிகளால் தெற்றிப் பண்ணின புல்லான் வேய்ந்த குடில்களிலிருக்கும் குடிகளிடந்தோறும் பெறுகுவிர் ;


1 வியம் - ஏவல்.

2 (பி-ம்.) ' ஆச்சாவிற் பூவும் '

3 காமரு : முருகு. 75, குறிப்புரை.