655

507 - 8.அரக்கு விரித்தன்ன செ நிலம் மருங்கின் பரல் தவழ் உடும்பின் கொடு தாள் ஏற்றை - அரக்கைப் பரப்பினாலொத்த சிவந்த நிலத்திடத்திற் சுக்கான் கல்லிலே தவழும் உடும்பினது வளைந்த காலையுடைய ஏறு,

509. வரை பொலிந்து இயலும் மடம் கண் மஞ்ஞை -மலையிடத்தே அழகுபெற்று ஆடும் மடப்பத்தையுடைய கண்ணினைடையமயில்,

510. கானக்கோழி கவர் குருல் சேவல் -கானத்திடத்துக்கோழியினது பெடையை அழைக்கின்றகுரலையுடைய சேவல்,

511.கானம் பலவின் முழவு மருள் பெரு பழம் - காட்டிடத்துப் பலாவினுடைய முழவென்று மருளும்பெரியபழம்,

512 - 3.[ இடிக்கலப் பன்ன நறுவடி மாவின், வடிச்சேறு விளைந்த தீம்பழத் தாரம் :] நறு வடி மாவின் இடி கலப்பன்ன வடி சேறு விளைந்த தீ பழம் தாரம் : நறிய வடுக்களையுடைய மாவினது பொடிச்செய்த 1 கண்டின் கலப்பையொத்த பிழியப்படும் சாறு முற்றினஇனிய பழமாகிய பண்டம்,

514. தூவல்கலித்த இவர் நனை வளர் கொடி - மழையாற்செருக்கின பரக்கின்ற அரும்புகளையுடைய மணம்வளருகின்ற 2நறைக்கொடி,

515.3 காஅய் கொண்ட நுகம் மருள் நூறை - காவிக்கொண்டு வந்த நுகமென்று மருளும் 4நூறைக்கிழங்கு,

நூறை - 5மலங்கென்பாருமுளர்.

516.[ பரூஉப்பளிங் குதிர்த்த :] உதிர்த்த பரூஉ பளிங்கு - மரத்தினின்றும் சிதறியுதிர்த்த பருத்த 6 நிகரமாகிய 7கருப்பூரம்,

பல உறு திரு மணி -பலவிலைபெற்ற அழகினை மாணிக்கம்,

517 - 8. [குரூஉப்புலி பொருத புண்கூர் யானை, முத்துடை மருப்பின் முழுவலி மிகுதிரள் :] குரூஉ புலி பொருத புண் கூர் முழு வலியானை முத்துடை மருப்பின் மிகு திரள் - நிறத்தையுடைய புலி பொரப்பட்ட புண் மிக்க குறைவில்லா வலியையுடைய யானைகளினுடைய முத்துடைக் கொம்புகளினுடைய மிக்கதிரள்,

519.வளை உடைந்தன்ன வள் இதழ் காந்தள் - வளையுடைந்தாற் போன்ற வளவிய இதழையுடையகாந்தட்பூ,


1 கண்டு -கற்கண்டு.

2 நறைக்கொடி - ஒருவகைக்கொடி ;"தண்கமழ் நறைக்கொடி கொண்டு" (ஐங்குறு. 276 : 2).

3 காஅய், காவி -தோளிற்சுமந்து.

4 பி - ம்.'நூற்றைக்கிழங்கு'

5 மலங்கு - ஒருவகைமீன்.

6 நிகரம் - திரள் ;"நிகரவேறு வேறாய ..............ஆரம்" (தக்க. 106)

7 கருப்பூரம் - ஒருவகைமரம் ; "இமயச்சாரற் கருப்புரக்கன்று" (சீவக. 1267)