657

532. மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்ப - மழைமுழக்கத்திற்கு எதிராகமுழங்கும் கண்ணையுடைய முழவின் கண்கள் ஒலியா நிற்க,

533. கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர - மூங்கிலாகிய இசை வளரும் பெருவங்கியத்தினது திறந்த கண்ணிடம் ஒலியாநிற்க,

534-6. [மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ், நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக், கடவ தறிந்த வின்குரல் விறலியர் :]

மருதம் பண்ணிய கரு கோடு சிறு யாழ் நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி இன் குரல் விறலியர் - மருதத்தை வாசித்த கரிய தண்டினையுடைய சிறிய யாழின்நரம்பினோசைக்கு மேற்போகாது அவ்வோசையுடனேகூடி ஓரோசையாய் இனிதாகிய பாட்டினையுடைய விறல்பட ஆடும் மகளிர்,

கடவது அறிந்த விறலியர் - தலைவனைக் கண்டாற் செய்யக்கடவ தொழில் யறிந்த விறலியர்,

537. தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது - பழைதாய் நடக்கும் முறைமையினையுடைய தம் இலக்கணத்தில் தப்பாமல்

538. அரு திறல் கடவுள் பழிச்சிய பின்றை -1பொறுத்தற்கு அரிய வலியையுடைய கடவுளை முதலில் வாழ்த்தின பின்பு,

முற்றத்தையணுகி (531) இகுப்ப (532) விறலியர் (536) தேவபாணியைப் பாடினபின்பு (539) என்க.

539. விருந்தின் பாணி கழிப்பி - சென்றாற் புதிதாகப்பாடும் பாட்டுக்களைப் பாடி,

539 - 40. நீண்மொழி குன்றா நல் இசை சென்றோர் உம்பல் - வேல் நிழற் புலவோர்க்குக் (88) கொடுத்தவற்றை வாங்காதபடி தாம் கூறிய வஞ்சினங்களிற் குறையாத நல்ல புகழிலே நடந்தோருடைய வழியில் வந்தவன்,

இதனாற் கொடைக்கடனிறுத்த அவன் தொல்லோர் வரவு (89) கூறினார்.

541 - 3. [ இன்றிவட் செல்லா துலகமொடு நிற்ப, விடைத்தெரிந்துணரும் பெரியோர் மாய்ந்தெனக், கொடைக்கட னிறுத்த செம்மலோயென :]

இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்தென - நன்று இது தீது இஃதென்று ஆராயும் பெரிய உபகாரிகள் இறந்தார்களாக,

இன்று இவன் செல்லாது உலகமொடு நிற்ப கொடை கடன் இறுத்த செம்மலோய் என - நின்பேர் இக்காலத்து இவ்வுலகிலே நடந்துவிடாதே உலகமுள்ளளவும் நிற்கும்படி கொடையாகிய கடனை முடித்த தலைமையை உடையோயென்றுகூறி,


1 " நலம்பொறுக் கலாத பிண்டி நான்முகன் " (சீவக. 402)