பத்துப்பாட்டு | கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் | 50 | பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட் டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற் கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர | 55 | வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணந்தின் வாய டுணங்கை தூங்க விருபே ருருவி னொருபே ரியாக்கை யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர் | 60 | மாமுத றடிந்த மறுவில் கொற்றத்; தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய் |
49. கழல்கட் கூகை: கழல்கட் கூகை குழறுகுரற் பாணி"(பதிற். 22 : 36) 49-60. போர்க்களவருணனை. 50-51. மோடேந் தரிவை ........ சார்ந்தோர் துட்கெனும் பேஎ யுருவம்(பெருங். 2. 8 : 106-10) 53. கண்டொட்டுண்ட : "கண்டொட் டுண்டு"(மணி. 6 : 125) 56. "கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடியாடித் தழலு ளெரியும் பிணத்தைவாங்கித் தான்றடிதின்று"(காரைக். திருவாலங்காட்டு. 7). துணங்கை :கலித். 70 : 14. 58.அறுவேறு வகையின்: ‘அறு' என்னும் முதனிலைத்தனிவினை அற்று எனப் பொருள்பட்டு வினையெச்ச மாயிற்றென்பதற்கு மேற்கோள்; இ-கொ. சூ. 66, உரை;நன். வி. சூ. 351. 57-61. "ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச், சூர்கொன்ற செவ்வேலான்"(கலித். 93-25 : 6), "ஈருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய்"(தொல். செய். 152, பேர். ந. மேற். செஞ்சுடர்) 59-61. கூடார் மெலியக் கொலைவே னினைந்தான் - அவர் வருந்தும்படி வேல் நினைந்தான் என்றது முருகனை; ‘அவுணர்............... சேஎய்' என்றார்"(சீவக. 2328, ந.) 45-61. மாக்கடன் முன்னி, அணங்குடை யவுண ரேமம் புணர்க்கும், சூருடை முழுமுத றடிந்த பேரிசைக், கடுஞ்சின விறல் வேள்"(பதிற். 11 : 3-6); கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவே, லடுபோராள", "நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச், சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்"(பரி. 9 : 70-71, 18 : 3-4); "உரவுநீர் மாகொன்ற
|