81

1 - திருமுருகாற்றுப்படை

குளித்தவேல் கொற்றவேல் 1சூர்மார்புங் குன்றும்
துளைத்தவே லுண்டே துணை.
4இன்ன மொருகா லென திடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும்.
52உன்னை யொழிய வொருவரையு நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின் செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே.
6அஞ்சு முகந்தோன்றி னாறு முகந்தோன்றும்
3வெஞ்சமரி லஞ்சலென வேறோன்றும் - நெஞ்சில்
4ஒருகா னினைக்கி னிருகாலுந் தோன்றும்
முருகாவென் றோதுவார் முன்.
7 முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும்
நம்பியே கைதொழுவே னான்.
8காக்கக் 5கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் 6பரமா மறுமுகவா - பூக்கும்
கடம்பா 7முருகா கதிர்வேலா நல்ல
இடங்கா ணிரங்கா யினி.


1. "உழல்சூரு மலைமார்பு முடனூடுறப் பொருது" (தக்க. 5) என்பதும், ‘சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறு படப் பொருதருளி' என்ற அதனுரையும் இங்கே கருதத்தக்கன.

2. "உன்னையலா லொருதெய்வ முள்கே னென்றும்" (தே. திருநா.); "உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க ளுத்தமனே" (திருவா.)

3. (பி-ம்.) ‘வெஞ்ச மரந்தோன்றில் வேறோன்றும்'

4. ஒருகால் - ஒரு முறை; இருகால் - இரண்டு திருவடிகள்.

5. (பி-ம்.) ‘கடன்காணீ'

6. (பி-ம்.) ‘பயங்கா ணறுமுகமா'

7. (பி-ம்.) ‘குமரா கதிர்வேலா'