91

2 - பொருநராற்றுப்படை

கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர் பொத்திய மனமகிழ் சிறப்பக்
100கல்லா விளைஞர் சொல்லிக் காட்டக்
கதுமெனக் கரைந்து வம்மெனக் கூஉ
யதன் முறை கழிப்பிய பின்றைப் பதனறிந்து
துராஅய் துற்றிய துருவையம் புழுக்கின்
பராஅரை வேவை பருகெனத் தண்டிக்
105காழிற் சுட்ட கோழூன் கொழுங்குறை
யூழி னூழின் வாய்வெய் தொற்றி
யவையவை முனிகுவ மெனினே சுவைய
வேறுபல் லுருவின் விரகுதந் திரீஇ
மண்ணமை முழவின் பண்ணமை சீறியா
110ழொண்ணுதல் விறலியர் பாணி தூங்க 
மகிழ்ப்பதம் பன்னாட் கழிப்பி யொருநா
ளவிழ்ப்பதங் கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
முரவை போகிய முரியா வரிசி
விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
115பரல்வறைக் கருனை காடியின் மிதப்ப
வயின்ற காலைப் பயின்றினி திருந்து


  


(புறநா. 138 : 11) என்பதற்கு, ‘நின்னை அறிவாரும் அறியாத தன்மையையாவை' என்றெழுதிய விசேடவுரை இங்கே அறிதற்பாலது.

98. "கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப, நனவி னல்கியோ னசைசா றோன்றல்", " கனவென மருள வல்லே நனவி, னல்கி யோனே நசைசா றோன்றல் " (புறநா. 377 : 19 - 20, 387 : 26 - 7)

101. "வம்மெனக் கூஉய்" (மணி. 19 : 98)

105. காழிற் சுட்ட கோழூன் : "காழ்க்கோத்த சூட்டென்கோ " (யா. வி. மேற்.)

107 - 8. "ஊனு மூணு முனையி னினிதெனப், பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவு, மளவுபு கலந்து மெல்லிது பருகி" (புறநா. 331 : 1 - 3)

115. ‘ பால்வறைக்கருனை ' எனவும் படிப்பதுண்டு.

113 - 5. "முரவை போகிய முரிவில்வான் மூரல்பால் வறையல், கருனை" (திருவிளை. குண்டோதரனுக்கு. 14)