2 - பொருநராற்றுப்படை | தண்பணை தழீஇய தளரா விருக்கை | 170 | நன்பல் லூர நாட்டொடு நன்பல் வெரூஉப்பறை நுவலும் பரூஉப்பெருந் தடக்கை வெருவரு செலவின் வெகுளி வேழந் தரவிடைத் தங்கலோ விலனே வரவிடைப் பெற்றவை பிறர்பிறர்க் கார்த்தித் தெற்றெனச் | 175 | செலவுகடைக் கூட்டுதி ராயிற் பலபுலந்து நில்லா வுலகத்து நிலைமை தூக்கிச் செல்கென விடுக்குவ னல்ல னொல்லெனத் திரைபிறழிய விரும்பௌவத்துக் கரைசூழ்ந்த வகன் கிடக்கை | 180 | மாமாவின் வயின்வயினெற் றாழ்தாழைத் தண்டண்டலைக் கூடுகெழீ இய குடிவயினாற |
169. மு. "தண்பணை தழீஇய, தளரா விருக்கை" (சிறுபாண். 78;பெரும்பாண். 242) "தண்பணை தழீஇய, சயந்தியம் பெரும்பதி" (பெருங். 2. 10 : 3 - 4) 172. (பி-ம்.) ‘வெருவருஞ் செலவின்' 171 - 2. "நிறையழி கொல்யானை நீர்க்குவிட் டாங்குப், பறையறைந் தல்லது செல்லற்க" (கலித். 56 : 32 - 3); "தெண்கணை முன்னர்க் களிற்றி னியலி" (புறநா. 79 : 3); "பாகும் பறையும் ............... அலவுற்று விளிப்ப", "பணையெழுந் தார்ப்ப, மாலை நெற்றி வான்பிறைக் கோட்டு, நீல யானை மேலோ ரின்றிக் காமர் செங்கை நீட்டி" (மணி. 4 : 41 - 2, 19 : 18 - 21); "பறைநிறை கொல்யானை", "அறைபறை யானை" (முத்); "முரசதிர்ந் தானைமுன் னோட முன்பணிந் தன்பர்க ளேத்த" (தே. ஆரூர்.) "பறைவன் களிற்று" (வி. பா. சூதுபோர். 225) 176. (பி-ம்.) ‘நிலைமை தூக்கி' மு. "நில்லா வுலகத்து நிலைமை தூக்கி" (பெரும்பாண். 466) 180. (பி-ம்.) ‘வயின் வயினின்' 181. வெண்பாவுரிச்சீரால் தூங்கலோசை பிறந்ததற்கு இவ்வடி மேற்கோள்; (தொல். செய். சூ. 22, பேர்.) 182. (பி-ம்.) ‘கூடு குழீஇய'
|