பத்துப்பாட்டு | செஞ்சோற்ற பலிமாந்திய கருங்காக்கை கவவுமுனையின | 185 | மனைநொச்சி நிழலாங்க ணீற்றியாமைதன் பார்ப்போம்பவு மிளையோர் வண்ட லயரவு முதியோ ரவைபுகு பொழுதிற்றம் பகைமுரண் செலவு முடக்காஞ்சிச் செம்மருதின்td> | 190 | மடக்கண்ண மயிலாலப் பைம்பாகற் பழந்துணரிய செஞ்சுளைய கனிமாந்தி யறைக்கரும்பி னரிநெல்லி னினக்களம ரிசைபெருக | 195 | வறளடும்பி னிவர்பகன்றைத் தளிர்ப்புன்கின் றாழ்காவி னைஞாழலொடு மரங்குழீஇய வவண்முனையி னகன்றுமாறி யவிழ்தளவி னகன்றோன்றி | 200 | நகுமுல்லை யுகுதேறுவீப் பொற்கொன்றை மணிக்காயா ்புறவி னடைமுனையிற் |
183 - 4. காக்கை பலியை உண்ணல்: "வெண்ணெல் வெஞ்சோ, றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி, ............ விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே" (குறுந். 210 : 3 - 6); "வரக்கரைந்தா, லுணங்கலஞ் சாதுண்ண லாமொண் ணிணப்பலி யோக்குவன்மாக், குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே" (திருச்சிற். 235) 188. (பி-ம்.) ‘பகைமுரண் சொலவும்' 190-92. மயில் பாகற்பழத்தை யுண்ணல் : "பாக லார்க்கைப் பறைகட் பீலித், தோகை", "பைங்கொடிப் பாகற் செங்கனி நசைஇக், கான மஞ்ஞைக் கமஞ்சூன் மாப்பெடை, யயிரியாற் றடைகரை வயிரி னரலும்" (அகநா. 15 : 4 - 5, 177 : 9 - 11) "பாகல் - பலா; ........... ‘பைம்பாகற் ......... மாந்தி' எனவுஞ் சொன்னார் பாட்டினும்" (சிலப். 16 : 22 - 8, அடியார்.) 201. மணிக்காயா. "மணியெனத் தேம்படு காயா" (ஐங். 420); "மணிபுரை யுருவின காயாவும்" (கலித். 101 : 5) 202. (பி-ம்.) ‘முணையின்'
|