99

2 - பொருநராற்றுப்படை

சுறவழங்கு மிரும்பௌவத்
திறவருந்திய வினநாரை
205பூம்புன்னைச் சினைச்சேப்பி
னோங்குதிரை யொலிவெரீஇத்
தீம்பெண்ணை மடற்சேப்பவுங்
கோட்டெங்கின் குலைவாழைக்
கொழுங்காந்தன் மலர்நாகத்துத்
210துடிக்குடிஞைக் குடிப்பாக்கத்
தியாழ்வண்டின் கொளைக்கேற்பக்
கலவம்விரித்த மடமஞ்ஞை
நிலவெக்கர்ப் பலபெயரத்
தேனெய்யொடு கிழங்குமாறியோர்
215மீனெய்யொடு நறவுமறுகவுந்
தீங்கரும்போ டவல்வகுத்தோர்
மான்குறையொடு மதுமறுகவுங்
குறிஞ்சி பரதவர் பாட நெய்த
னறும்பூங் கண்ணி குறவர் சூடக்
220கானவர் மருதம் பாட வகவர்
நீனிற முல்லைப் பஃறிணை நுவலக்
கானக்கோழி கதிர்குத்த
மனைக்கோழி தினைக்கவர

 


210. "விரலூன்று படுக ணாகுளி கடுப்பக், குடிஞை யிரட்டு நெடுமலை" (மலைபடு. 140 - 41); "உருமிடி மகுளியிற் பொருடெரிந் திசைக்கும், கடுங்குரற் குடிஞைய நெடும்பெருங் குன்றம்" (அகநா. 19 : 4 - 5); "கடுந்துடி, புலிதுஞ்சு நெடுவரைக் குடிஞையோ டிரட்டு மலை", "அந்தக் குடிஞைத் துடிமரு டீங்குரல்" (புறநா. 170 : 6 - 8, 370 : 6)

213. மணலுக்கு நிலவு : "நிலவுக் கானல்" (மதுரைக். 114); "நிலவடைந்த விருள்போல, வலையுணங்கு மணன்முன்றில்" (பட்டினப். 82 - 3); "நிலவுக்குவித் தன்ன மோட்டுமண லடைகரை", "நிலவுத்தவழ் மணற்கோடு", (நற். 159 : 4, 163:5); "நிலவுக்குவித்தன்ன வெண்மண லொருசிறை ", "நிலவுநிற வெண்மணல்" (குறுந். 123 : 2, 320 : 3); "நிலாவி னிலங்கு மணன்மலி மறுகில்" (அகநா. 200 : 1); நிலவுமணல் வியன்கானல்" (புறநா. 17 : 11); "நிலாவெழுந்த வார்மண னீடி" (திணைமாலை. 29).