| சான்றோ ருரைத்த தண்டமிழ்த் தெரியல் ஒருபது பாட்டு முணர்பவர்க் கெல்லாம் உரையற முழுதும் புரைபட வுரைத்தும் ஒலித்திரைத் தலத்தி னுணர்ந்தோ ருரைக்கும் |
20 | கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டதற் குள்ளுறை யுவமமு மேனை யுவமமும் தெள்ளிதிற் றெரிந்து திணைப்பொருட் கேற்ப உள்ளுறை யுவமத் தொளித்த பொருளைக் கொள்பவர் கொள்ளக் குறிப்பறிந் துணர்த்தி |
25 | இறைச்சிப் பொருளுக் கெய்தும் வகையைத் திறம்படத் தெரிந்து சீர்பெறக் கொளீஇத் துறைப்படு பொருளொடு சொற்பொருள் விளக்கி முறைப்பட வினையை முடித்துக் காட்டிப் பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்துப் |
30 | பாற்பட நூலின் யாப்புற வுரைத்த நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப் போற்ற வின்னுரை பொருள்பெற விளம்பியும் வையம் புகழ்ந்து மணிமுடி சூட்டிய பொய்யில் வான்கதை பொதிந்த செந்தமிழ்ச் |
35 | சிந்தா மணியைத் தெண்கடன் மாநிலம் வந்தா தரிப்ப வண்பெரு வஞ்சிப் பொய்யா மொழிபுகழ் மையறு காட்சித் திருத்தகு முனிவன் கருத்திது வென்னப் பருப்பொருள் கடிந்து பொருட்டொடர்ப் படுத்து |
40 | வினையொடு முடியப் புனையுரை யுரைத்தும் நல்லறி வுடைய தொல்பே ராசான் கல்வியுங் காட்சியுங் காசினி யறியப் பொருடெரி குறுந்தொகை யிருபது பாட்டிற் கிதுபொரு ளென்றவ னெழுதா தொழிய |
45 | இதுபொரு ளென்றதற் கேற்ப வுரைத்தும் தண்டமிழ் தெரித்த வண்புகழ் மறையோன் வண்டிமிர் சோலை மதுரா புரிதனில் எண்டிசை விளங்க வந்த வாசான் பயின்ற கேள்விப் பாரத் துவாசன் |
50 | நான்மறை துணிந்த நற்பொரு ளாகிய தூய ஞான நிறைந்த சிவச்சுடர் தானே யாகிய தன்மை யாளன் நவின்ற வாய்மை நச்சினார் கினியன் இருவினை கடியு மருவியம் பொதியிலின் |