|
|
சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி |
|
தானும் சூடினன்; இளைஞரும் மலைந்தனர்; |
|
விசும்பு கடப்பன்ன பொலம் படைக் கலி மா, |
|
படு மழை பொழிந்த தண் நறும் புறவில், |
5 |
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப, |
|
மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் |
|
தந்தன நெடுந்தகை தேரே; என்றும் |
|
அரும் படர் அகல நீக்கி, |
|
விருந்து அயர் விருப்பினள், திருந்துஇழையோளே. |
உரை |
|
வாயில்களோடு தோழி உறழ்ந்து சொல்லியது.-மதுரைப் பேராலவாயர்
|
|
வினை அமை பாவையின் இயலி, நுந்தை |
|
மனை வரை இறந்து வந்தனை; ஆயின், |
|
தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி |
|
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த |
5 |
கடுஞ் செம்மூதாய் கண்டும், கொண்டும், |
|
நீ விளையாடுக சிறிதே; யானே, |
|
மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை |
|
மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி, |
|
அமர் வரின், அஞ்சேன், பெயர்க்குவென்; |
10 |
நுமர் வரின், மறைகுவென்-மாஅயோளே! |
உரை |
|
உடன்போகாநின்ற தலைமகன், தலைமகட்குச் சொல்லியது.-மதுரை மருதன் இள நாகனார்
|
|
''கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் |
|
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான்'' என |
|
வியம் கொண்டு ஏகினைஆயின், எனையதூஉம் |
|
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் |
5 |
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு |
|
வம்மோ-தோழி!-மலி நீர்ச் சேர்ப்ப- |
|
பைந் தழை சிதைய, கோதை வாட, |
|
நன்னர் மாலை, நெருநை, நின்னொடு |
|
சில விளங்கு எல் வளை ஞெகிழ, |
10 |
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே. |
உரை |
|
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி, ''தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ எம்பெருமான் கவலாது செல்வது? யான் ஆற்றுவிக்குமிடத்துக் கவன்றால் நீ ஆற்றுவி'' எனச் சொல்லியது; கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத
|
|
சொல்லிய பருவம் கழிந்தன்று; எல்லையும் |
|
மயங்கு இருள் நடு நாள் மங்குலோடு ஒன்றி, |
|
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க, |
|
பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப, |
5 |
இன்ன சில் நாள் கழியின், பல் நாள் |
|
வாழலென் வாழி-தோழி!-ஊழின் |
|
உரும் இசை அறியாச் சிறு செந் நாவின் |
|
ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்ப, |
|
பல் ஆ தந்த கல்லாக் கோவலர் |
10 |
கொன்றைஅம் தீம் குழல் மன்றுதோறு இயம்ப, |
|
உயிர் செலத் துனைதரும் மாலை, |
|
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே. |
உரை |
|
தலைமகள் பிரிவிடை மெலிந்தது.-கிடங்கில் காவிதிப் பெருங் கொற்றனார்
|
|
அருங் கடி அன்னை காவல் நீவி, |
|
பெருங் கடை இறந்து, மன்றம் போகி, |
|
பகலே, பலரும் காண, வாய் விட்டு |
|
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி, |
5 |
சென்மோ வாழி-தோழி!-பல் நாள் |
|
கருவி வானம் பெய்யாதுஆயினும், |
|
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் |
|
வான் தோய் மா மலைக் கிழவனை, |
|
''சான்றோய் அல்லை'' என்றனம் வரற்கே. |
உரை |
|
தோழி, தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்கு உரைப்பாளாய் இயற்பழித்து,''இன்னது செய்தும்'' என்பாளாய்ச் சொல்லியது.-கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார்
|
|
அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ் |
|
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் |
|
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள் |
|
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ, |
5 |
கூதிர் முல்லைக் குறுங் கால் அலரி |
|
மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த |
|
இரும் பல் மெல் அணை ஒழிய, கரும்பின் |
|
வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி, |
|
முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை |
10 |
மூங்கில்அம் கழைத் தூங்க, ஒற்றும் |
|
வட புல வாடைக்குப் பிரிவோர் |
|
மடவர் வாழி, இவ் உலகத்தானே! |
உரை |
|
உலகியல் கூறிப் பொருள்வயிற் பிரிய வலித்த நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது.-மதுரை ஈழத்துப் பூதன் தேவனார்
|
|
கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை |
|
நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇ, கிளை பயிர்ந்து, |
|
கருங் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு |
|
சூருடைப் பலியொடு கவரிய, குறுங் கால் |
5 |
கூழுடை நல் மனைக் குழுவின இருக்கும் |
|
மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி |
|
மெல் இயல் அரிவை! நின் பல் இருங் கதுப்பின் |
|
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் |
|
தளை அவிழ் அலரித் தண் நறுங் கோதை |
10 |
இளையரும் சூடி வந்தனர்: நமரும் |
|
விரி உளை நன் மாக் கடைஇ, |
|
பரியாது வருவர், இப் பனி படு நாளே. |
உரை |
|
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி, |
|
கருங் கால் வேங்கை ஊசல் தூங்கி, |
|
கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து, நும்மொடு |
|
ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ? |
5 |
நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த |
|
வெறி கமழ் கொண்ட நாற்றமும், சிறிய |
|
பசலை பாய்தரு நுதலும், நோக்கி, |
|
வறிது உகு நெஞ்சினள், பிறிது ஒன்று சுட்டி, |
|
வெய்ய உயிர்த்தனள் யாயே- |
10 |
ஐய!-அஞ்சினம், அளியம் யாமே! |
உரை |
|
தோழி, தலைமகற்குச் செறிப்பு அறிவுறீஇயது.- கபிலர்
|
|
சுடர் சினம் தணிந்து குன்றம் சேர, |
|
நிறை பறைக் குருகினம் விசும்பு உகந்து ஒழுக, |
|
எல்லை பைபயக் கழிப்பி, முல்லை |
|
அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை |
5 |
இன்றும் வருவது ஆயின், நன்றும் |
|
அறியேன் வாழி-தோழி!-அறியேன், |
|
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி, |
|
வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் |
|
கங்கைஅம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் |
10 |
சிறை அடு கடும் புனல் அன்ன, என் |
|
நிறை அடு காமம் நீந்துமாறே. |
உரை |
|
பட்ட பின்றை வரையாது பொருள்வயிற் பிரிந்து, ஆற்றாளாகிய தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது.-மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்
|
|
வாராய், பாண! நகுகம்-நேரிழை |
|
கடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி, |
|
நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் |
|
விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி, |
5 |
''புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் |
|
திதலை அல்குல் முது பெண்டு ஆகி, |
|
துஞ்சுதியோ, மெல் அம் சில் ஓதி?'' என, |
|
பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி, |
|
உள்ளினென் உறையும் எற் கண்டு, மெல்ல, |
10 |
முகை நாண் முறுவல் தோற்றி, |
|
தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே. |
உரை |
|
ஊடல் நீட ஆற்றானாய் நின்றான் பாணர்க்குச் சொல்லியது; முன் நிகழ்ந்ததனைப் பாணர்க்குச் சொல்லியதூஉம் ஆம்.- உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
|
|