பக்கம் எண் :


11


யாருமில்லாத பதம் பார்த்து, அதுகாறும் ஆராய்ந்து கொண்டிருப்பனென்றதாம்.

    உள்ளுறைகள் :- (2) சகடம் மணலில் மடுத்து முழங்கு மோசைக்குக் கழனி நாரை வெருவுமென்றது, தலைவன் சான்றோரை முன்னிட்டு அருங்கலன் தந்து வரையவரு மணமுரசொலி கேட்பின், அலரெடுக்கும் ஏதிலாட்டியர் வாய்வெருவி யொடுங்காநிற்ப ரென்றதாம். மெய்ப்பாடு - அச்சத்தைச் சார்ந்த பெருமிதம். பயன் - வரைவுகடாதல். இதனைத் தலைவி கூற்றாகக் கொண்டார் நச்சினார்க்கினியர்; (தொ-பொ- 113 உரை.)

    (பெரு - ரை.) அம்கண் அரில்வலை எனக் கண்ணழித்து-அழகிய கண்களையும் பின்னலையும் உடைய வலை எனினும் ஆம். அரில்-பின்னல். அன்னை அலர் அறியின் நமக்கு இவணுறை வாழ்க்கை அரியவாகும் எனக் கூறின் என இயைத்துக் கோடலுமாம். மேவும் என்னும், செய்யும் என்னும் எச்சத்து ஈற்றுயிரும் மெய்யுங்கெட்டுமேம் என நின்றது. (4)

  
5. பெருங்குன்றூர்கிழார்
திணை : குறிஞ்சி

துறை : இது, தலைவன் செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைவிக்குத் தோழி சொல்லியது.

    (து - ம்.) என்பது, வினைவயிற் செல்லுந் தலைமகனது குறிப்பறிந்த தலைவி தனித்து உறைதற்கஞ்சிக் கலுழ்ந்து வேறுபட்டுக்காட்ட, அதனையறிந்த தோழி தலைவியை நோக்கி, நின்கண்கள் குறிப்பாகிய மாறுபட்ட ஒரு தூதுவிடுத்தன; அத்தூதையறிந்து அவர் செல்லுதலொழிந்தனராதலின், இனி முன்பனிக்காலத்தும் அவரைப் பிரிதலரிதுகாண் எனத் தேற்றிக் கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "பெறற்கரும் பெரும் பொருள்" (தொல்-கற்- 9) என்னும் நூற்பாவின்கண் வரும் "பிறவும் வகைபடவந்த கிளவி" என்பதன்கண் அமைத்துக்கொள்க.

    
நிலநீர் ஆரக் குன்றங் குழைப்ப 
    
அகல்வாய்ப் பைஞ்சுனைப் பயிர்கால் யாப்பக்  
    
குறவர் கொன்ற குறைக்கொடி நறைப்பவர் 
    
நறுங்காழ் ஆரஞ் சுற்றுவன அகைப்பப் 
5
பெரும்புயல் பொழிந்த தொழில எழிலி 
    
தெற்கேர் பிரங்கும் அற்சிரக் காலையு 
    
மரிதே காதலர்ப் பிரிதல் இன்றுசெல் 
    
இகுளையர்த் தரூஉம் வாடையொடு 
    
மயங்கிதழ் மழைக்கண் பயந்த தூதே. 

    (சொ - ள்.) இன்று செல் இகுளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கு இதழ் மழைக்கண் - தோழீ! இன்று பிரிந்து