(து - ம்,) என்பது, தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவியின் இற்செறிப்பும் உள்ளுறையால் வேற்றுவரைவு நேர்ந்தமையும் தோழி அறிவுறுத்தி வரைவுடன் படுத்துவாளாய் 'மலைநாடன் யார்தரவரினும் மாலையனாகி வாராநிற்பன்; வந்தும் யாது பயன்; முயங்கப் பெறுபவனல்லன்; புலந்து போயினும் போவானாக' வென்று வெகுண்டு கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை "களனும் பொழுதும் . . . . . .அனை நிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதன்கண் அமைத்துக் கொள்க.
| திணையுண் கேழல் இரியப் புனவன் |
| சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் |
| ஒண்கேழ் வயப்புலி படூஉம் நாடன் |
| ஆர்தர வந்தனன் ஆயினும் படப்பை |
5 | இன்முசுப் பெருங்கலை நன்மேயல் ஆரும் |
| பன்மலர்க் கான்யாற்று உம்பர்க் கருங்கலை |
| கடும்பாட்டு வருடையொடு தாவன உகளும் |
| பெருவரை நீழல் வருகுவன் குளவியொடு |
| கூவிளந் ததைந்த கண்ணியன் யாவதும் |
10 | முயங்கல் பெறுகுவன் அல்லன் |
| புலவி கொளீஇயர்தன் மலையினும் பெரிதே. |
(சொ - ள்.) தினை உண் கேழல் இரிய புனவன் சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் - தினைப்புனத்து வந்து மேயும் பன்றி பட்டொழியுமாறு அகத்தினைப்புனத்துக்குத் தலைவன் சிறிய இயந்திரமாக அமைத்து வைத்த பெரிய கல்லின் கீழால்; ஒள் கேழ் வய புலி படூஉம் நாடன் ஆர்தர வந்தனன் ஆயினும் - ஒள்ளிய நிறத்தையும் வலியையுமுடைய புலி புகுந்துபடுகின்ற மலைநாடன் யாராலே தரப்பட்டு வந்தவனாயினும்; படப்பை இன்முசுப் பெருங்கலை நல்மேயல் ஆரும் பல் மலர்க் கான்யாற்று உம்பர் - கொல்லையின்கண் இனிய முசுவின் பெரியகலை நல்ல உணவை உண்ணாநிற்கும் பலவாய மலரையுடைய கான்யாற்றின் மேலுள்ள; கருங்கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவன உகளும் பெருவரை நிழல் - கரையின்கண்ணே பெரிய கலை மான், கூட்டமாகிய மலையாட்டினத்துடனே தாவித் துள்ளிக் குதியாநிற்கும் பெரிய மூங்கிற்புதர் நிழலில்; குளவியொடு கூவிளம் ததைந்த கண்ணியன்