பக்கம் எண் :


505


மள்ளனார்
    திணை : குறிஞ்சி.

    துறை : (1) இது, தோழி சிறைப்புறமாகத் தலைமகட் குரைப்பாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது.

    (து - ம்.) என்பது, தலைமகன் சிறைப்புறத்தானாக அவன் கேட்குமாற்றானே தோழி தலைமகளை நோக்கி நின்னிடத்து நிகழுங் குறிப்புப் புணர்ச்சிக் குறிப்புப் போலப் பெரிதா யிராநின்றது; நீ நாடனை முயங்கிய குறியை அன்னை நோக்கினால் ஐயப்படா நிற்குமன்றே; ஆண்டுக் கூவாநின்றனள் காணென்று மருண்டு கூறாநிற்பது.

    (இ - ம்.)இதற்கு, "களனும் பொழுதும் . . .. . . . .அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதி கொள்க.

    துறை : (2)தோழி தலைமகளை அறத்தொடு நிலைவலிப்பித்ததூஉமாம்.

    (து - ம்.) என்பது, தோழி தலைமகளை அறத்தொடு நிற்கும்படி கூறி உடன் படுத்தியதுமாகும் (உரை இரண்டிற்கு மொக்கும்.)

    (இ - ம்.) இதனை, "நாற்றமும் தோற்றமும்" (தொல். கள. 23) என்னும் நூற்பாவின்கண், "வகை" என்பதனாற் கொள்க.

    
பொன்செய் வள்ளத்துப் பால்கிழக் கிருப்ப 
    
நின்னொளி ஏறிய சேவடி ஒதுங்காய் 
    
பன்மாண் சேக்கைப் பகைகொள நினைஇ 
    
மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை 
5
எவன்கொல் என்று நினைக்கலும் நினைத்திலை 
    
நின்னுள் தோன்றுங் குறிப்புநனி பெரிதே 
    
சிதர்நனை முனைஇய சிதர்கால் வாரணம் 
    
முதிர்கறி யாப்பின் துஞ்சும் நாடன் 
    
மெல்ல வந்து நல்லகம் பெற்றமை 
10
மையல் உறுகுவள் அன்னை 
    
ஐயம் இன்றிக் கடுங்கூ வினளே. 

    (சொ - ள்.) பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப - தோழீ! பொன்னாற் செய்த கிண்ணத்துள் வைத்த பால் நின்னால் உண்ணப்படாமல் கீழே வைத்திருக்கின்றமை காணாய;் நின் ஒளி ஏறிய - நின் மேனியின் ஒளிமிக்கு வேறு வண்ணமாகத் தோன்றுவ; சே அடி ஒதுங்காய் - அன்றி மெல்ல நின் சிவந்த அடிகளால் நடந்து இயங்கினாயுமல்லை; பல் மாண்