(து - ம்.) என்பது, அயலார் பழிச் சொல்லெடுத்தலால் அது பொறாது வருந்திய தலைமகளைத் தோழி நோக்கி 'நம்மூர் எல்லா வளனுமுடையது; துறையும் இனிமையுடையது; நம் காதலரின் தேரொலி கேட்டல் அரிதானமையின் நம்மூர்ச் சோலைக்கு அஃது ஒன்றுமே பழியுடையதா யிராநின்றது; அவர் வந்து கூடின் அதுவும் மிக நல்லதாயிருக்கு'மென்று கூறி ஆற்றுவிப்பது.
(இ - ம்.) இதற்கு, "என்பு நெகப் பிரிந்தோள் வழிச் சென்று கடைஇ அன்புதலை யடுத்த வன்புறைக் கண்ணும்" (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| பெயினே, விடுமான் உழையினம் வெறுப்பத் தோன்றி |
| இருங்கதிர் நெல்லின் யாணர் அஃதே |
| வறப்பின், மாநீர் முண்டகந் தாஅய்ச் சேறுபுலர்ந்து |
| இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு விளையும் |
5 | அழியா மரபின்நம் மூதூர் நன்றே |
| கொழுமீன் சுடுபுகை மறுகினுள் மயங்கிச் |
| சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே |
| ஒன்றே தோழிநங் கானலது பழியே |
| கருங்கோட்டுப் புன்னை மலரில்தா தருந்தி |
10 | இருங்களிப் பிரசம் ஊதஅவர் |
| நெடுந்தேர் இன்னொலி கேட்டலோ அரிதே. |
(சொ - ள்.) தோழி அழியா மரபின் நம் மூதூர் - தோழீ! அழியாத மரபினையுடைய நம் பழைமையான ஊரானது; பெயின் விடுஉழைமான் இனம் வெறுப்பத் தோன்றி இருங்கதிர் நெல்லின் யாணர் அது - மழை பெய்தாலோ எங்கும் உலாவா நின்ற உழையாகிய மான் கூட்டங்கள் செறியத் தோன்றப் பெற்றும் பெரிய கதிர்களையுடைய நெல்லின் புதுவருவாயினை உடையதாயிராநின்றது; வறப்பின் மாநீர் முண்டகம் தாஅய்ச் சேறுபுலர்ந்து இருங் கழிச் செறுவின் வெள்உப்பு