(து - ம்.) என்பது, பாங்கியிற்கூட்டத்துத் தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி தலைவியை மெலிதாகச் சொல்லிக் குறையறிவுறுத்தலும் அவள் அறியாள் போலுதலின் வலிதாகக் கூறிக் குறைநயப்பிக்கத் தொடங்கி அத்தோன்றல் படுந்துயரை யான் கூற நீ தெளிந்திலை; வேறு தோழியரோடேனும் ஆராய்ந்து தக்கது செய்யெனப் புலந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, "மறைந்தவளருகத் தன்னொடு மவளொடு முதன்மூன் றளைஇப் பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல்-கள்- 23) என்பதன்கண் அமைத்துக்கொள்க.
| அண்ணாந் தேந்திய வனமுலை |
| மாயோ னன்ன மால்வரைக் கவாஅன் |
| வாலியோ னன்ன வயங்குவெள் ளருவி |
| அம்மலை கிழவோன் நந்நயந் தென்றும் |
| வருந்தின னென்பதோர் வாய்ச்சொல் தேறாய் |
5 | நீயுங் கண்டு நுமரொடும் எண்ணி |
| அறிவறிந் தளவல் வேண்டு மறுதரற்கு |
| அரிய வாழி தோழி பெரியோர் |
| நாடி நட்பி னல்லது |
| நட்டு நாடார்தம் ஒட்டியோர் திறத்தே |
(சொ - ள்.) தோழி வாழி மாயோன் அன்ன மால்வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி - தோழீ ! வாழி ! மாயோனைப் போன்ற பெரிய மலைப்பக்கத்து அவன் கண்ணனாயவதரித்த பொழுது அவனுக்கு முன்னவனாகத் தோன்றிய வெளிய நிறத்தையுடைய பலதேவனைப் போன்ற விளங்கிய