பக்கம் எண் :


613


     (வி - ம்.)செம்மூதாய் - தம்பலப் பூச்சியுமாம்.

     தான் அவரை அடும் ஆற்றலுடையனாயினும் தலைவி தன்னுள்ளத்து எம்பெருமானுக்கு ஏதேனும் ஏதம் நிகழுங் கொல்லோவென்றேங்கி இறந்துபடு மாதலின், அது கருதி நுமர்வரின் மறைகுவே னென்றான்.

     இறைச்சி :- மழகளிறு உரிஞ்சிய வேங்கை அங்ஙனம் உரிஞ்சுதலானே கெடாதவாறு போல எத்தகைய பகைவர் வந்து மோதினும் அஞ்சே னென்றதாம். மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - தன்வலியுணர்த்தித் தலைவியை ஆற்றுவித்தல்.

     (பெரு - ரை.) வினை - பொறித்தொழில். அமர் - ஆறலை கள்வர் முதலாயினோர் வரின் நிகழ்வது. 'தண்பத வெழிலி' என்றும் பாடம்.

(362)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, பகற்குறி வந்து நீங்குந் தலைமகனைத் தோழி தலைமகளை என்னை யாற்றுவிக்குமென்றாகாதோ எம்பெருமான் கவலாது செல்வது : யான் ஆற்றுவிக்கும் இடத்துக் கவன்றால் நீ ஆற்றுவியெனச் சொல்லியது.

     (து - ம்.) என்பது, தோழி பகற்குறி வந்து நீங்குந் தலைமகனை நெருங்கி இறைவியை யான் அயாவோம்புவேனென் றெண்ணியோ நீ கவலையடையாது செல்கின்றனை? யான் ஆற்றுவிக்குமிடத்து அவள் கவலைகொண்டால் நீயே வந்து ஆற்றுவிக்கவேண்டுமென்கின்றாள்; என் தோழி உன்னோடாடியதாலே சிலம்பு உடைந்துபோகியது கண்டாய், அது கம்மியன் இணைப்பதற்குமேலே மண்கட்டவேண்டியதாதலின் அவன் எடுக்குந் துறைமணல் கொடுவருவாயாகவென்று கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்னும் விதியினாற்கொள்க.

     துறை : (2) கையுறை நேர்ந்த தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉமாம்.

     (து - ம்.) என்பது, வெளிப்படை.

     (இ - ம்.) இதனை, "மறைந்தவள் அருக .. . . . . பின்னிலை நிகழும் பல்வேறு மருங்கினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.

    
கண்டல் வேலிக் கழிசூழ் படப்பைத் 
    
தெண்கடல் நன்னாட்டுச் செல்வன் யானென 
    
வியங்கொண்டு ஏகினை யாயின் எனையதூஉம் 
    
உறுவினைக் கசாவா உலைவில் கம்மியன்  
5
பொறியறு பிணைக்கூட்டுந் துறைமணல் கொண்டு 
    
வம்மோ தோழி மலிநீர்ச் சேர்ப்ப