பக்கம் எண் :


636


இடமகன்ற வைப்புக்களையுடைய நாடுகள்தோறும் ஊர்கள் தோறும் சென்று ஒள்ளிய நெற்றியையுடைய அவளது அழகைச் சிறப்பித்துக் கூறி; பண்ணல் மேவலம் ஆகி - அம் மடலேறுந் தொழிலில் செல்லேமாகி; அரிது உற்று அது பிணி ஆக - எம் முள்ளத்தை அரிதாக நிலைநிறுத்தி அதுவே நோயாகக் கொண்டு கிடந்து; விளியலங்கொல்லோ - இறந்துபோக மாட்டேமோ? அங்ஙனம் மடலேறிப் பலராலும் இகழப்பட்டுத்தான் முடிய வேண்டும் போலும்! மடலேறுதலினும் உயிர்துறந்தொழிதல் நலனன்றோ? எ - று.

     (வி - ம்.) பண்ணல் மேவலம் என்பன ஒரு சொல்லாகிப் பாராட்டி என்பதற்கு முடிபாயின. அகனிலாவையுடைய மதியம்போல வென மாறிக்கூட்டினும் அமையும். எதிர் தோன்றுதல் - உருவெளித் தோற்றம். இது, துன்பத்துப் புலம்பல்.

     அவளைச் சிறப்பித்துக் கூறுவான்போலத் தான் அவள்பால் வைத்த அன்பின் நிலைமை புலப்படுத்தினான். நோய்கொண்டு இறவேமோ என்றதனால் மடலேறி வரைபாய்ந்து முடியவேண்டும் போலும் என்றான். இதனால் அவள் காரணமாக உயிர்விடத் துணிந்தமையும் அவ்வாறு உயிர்விடும் பழி நும்மை விடாதென்பதையும் அறிவுறுத்தினானாயிற்று. மெய்ப்பாடு - தன்கட்டோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - தோழி குறை முடிப்பது; அன்றேல் தானே கூறியாறுதல்.

     (பெரு - ரை.) நலம் பாராட்டிப் பண்ணலாகிய அத் தொழிலை மேவலம் ஆகி என்க.

(377)
  
     திணை : நெய்தல்.

     துறை : (1) இது, தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.

     (து - ம்,) என்பது, களவின் வழிவந் தொழுகுந் தலைமகன் ஒருபுறம் வந்து வைகினான். அதனை அறிந்து விரைய வரைவொடு புகும்வண்ணம் தோழி, தலைவியை நெருங்கித் தோழீ! யாமம் முதலாயின வருத்தாநிற்ப; இன்னும் ஞாயிறு தோன்றினபாடில்லை; முன்பு சேர்ப்பனொடு ஆராயாது செய்த நட்பின் அளவானது ஏதிலாட்டியர் அலர் தூற்றுமாறு இவ் வண்ணம் ஆயிற்றுக்காண் என்று வருந்திக் கூறாநிற்பது.

     (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . . . . . அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனாற் கொள்க.

     துறை : (2) தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்பொறை எதிர்மொழிந்ததூஉமாம்.

     (து - ம்,) என்பது, தலைமகன் ஒருவினை மேலிட்டுப் பிரிந்து போகியபின் வருந்திய தலைமகளைத் தோழி, வலிதிற் பொறுத்திருவென்றாட்கு