(து - ம்,) என்பது, சென்று வினைமுடித்து வருந் தலைமகனை இடைச்சுரத்து முன்னும் பின்னும் நோக்கி நின்றவர்களுள் ஒருவர் நோக்கி, 'முன்பு இவன் இச் சுர நெறியின் கண்ணே ஆழியதிர முன் பனி நாளிற் சென்றனன்; இப்பொழுது கார்ப்பருவம் வரலாயதே யெனக் குளிர்ந்த வுள்ளத்தனாகி மீளா நின்றனன். இவன் வாழ்வானாக; இதற்கு யான் மகிழ்வேன் மன்னோ' என மகிழ்ந்து கூறாநிற்பது.
(இ - ம்.) இதனை, ''மரபுநிலை திரியாவாகி விரவும் பொருளும் விரவு மென்ப'' (தொல். அகத். 45) என்னும் நூற்பாவிற் கொள்க.
திணை : குறிஞ்சி.
துறை : (2) வன்சொல்லாற் குறை நயப்பித்த தோழி, தான் தனித்துக் கூறியதுமாம்.
(து - ம்,) என்பது, வெளிப்படை.
(இ - ம்.) இதற்கு, ''நன்னயம் பெற்றுழி நயம்புரி யிடத்தினும்'' (தொல். கள. 23) என்னும் விதிகொள்க.
| மரந்தலை மணந்த நனந்தலைக் கானத்து |
| அலந்தலை ஞெமையத்து இருந்த குடிஞை |
| பொன்செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் |
| பெய்ம்மணி ஆர்க்கும் இழைகிளர் நெடுங்தேர் |
5 | வன்பால் முரப்பின் நேமி அதிரச் |
| சென்றிசின் வாழியோ பனிக்கடு நாளே |