பக்கம் எண் :


9


இவளை நோக்குழியேபெறக் கிடத்தலிற் பொருளை நச்சிவாரேனெனவுங் குறிப்பித்தானாயிற்று. அங்ஙனமாக என்பது முதற் குறிப்பெச்சம்.

இறைச்சிப்பொருள் :- பருந்து வருந்தியிருக்கும் வேம்பின் நிழலில் அப்பருந்தின் வருத்தத்தை ஏறிட்டு நோக்காது, சிறார் நெல்லிவட்டாடி மகிழா நிற்பர் என்றது, யான் இவளைப் பிரிதலால் வருந் துன்பத்திற்கஞ்சி வருந்தவும் அதனைக் கருதாத என்னெஞ்சே! நீ பொருள்மேற்சென்று மீளும் மகிழ்ச்சியை உடையையாயிரா நின்றாய் என்பதாம். மெய்ப்பாடு - பிறன்கண் தோன்றிய வருத்தம் பற்றிய இளிவரல். பயன் - இல்லத்தழுங்கல். இதனை இத்துறையிலேயே அடக்கினார் நச்சினார்க்கினியர்; (தொல்-பொ-சூ- 43 உரை.)

    (பெரு - ரை..) கட்டளையன்ன இட்டரங்கு என்றும் பாடம். வட்டினாலே கீறி என்னும் உரை பொருந்தாது. வட்டு நெல்லிக்காயே ஆதலின் அதனால் அரங்கு கீறுதல் அமையாமையும் உணர்க. இட்டரங்கு - சிறிய வகுப்பறைகளையுடைய அரங்கு என்க. உள்ளினென் அல்லெனோ என்றும் பாடம். இச்செய்யுளின்கண் தலைவன் முன்னிகழ்ந்த நிகழ்ச்சியை நினைந்து செலவழுங்கினமையின் இதனை, "நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்." (தொல்-அகத்- 43) என்னும் நூற்பாவிற்கு எடுத்துக் காட்டினர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். (3)
4. அம்மூவனார்
திணை ; நெய்தல்.

துறை : இது, தலைவன் சிறைப்புறத்தானாகத்தோழி அலர் அச்சந்தோன்றச் சொல்லி வரைவுகடாயது

    (து - ம்.) என்பது, களவொழுக்கத்து, அணித்தான ஓரிடத்திலே தலைவன் வந்திருப்பதை யறிந்த தோழி, அவன் கேட்டலும் விரைய வரைந்து கொள்ளுமாற்றானே தலைவியை நோக்கி, நமக்குண்டாகிய பழிச்சொல்லை அன்னை யறிந்தால் இற்செறிப்பாளென்று தலைவர்பாற் கூறின், அவர் நம்மைத் தம்மூர்க்குக் கொண்டுபோவரோ எனக் கவன்று கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "ஆற்றது.....அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல்-கள- 23) வகை என்பதன்கண் அமைத்துக் கொள்க.

    
கானலஞ் சிறுகுடிக் கடல்மேம் பரதவர் 
    
நீனிறப் புன்னைக் கொழுநிழ லசைஇத்  
    
தண்பெரும் பரப்பின் ஒண்பதம் நோக்கி 
    
யங்கண் அரில்வலை உணக்குந் துறைவனொ 
5
டலரே, அன்னை யறியின் இவண்உறை வாழ்க்கை 
    
அரிய வாகும் நமக்கெனக் கூறிற்