பக்கம் எண் :


440


வேலத் தாழ்சினை என விகாரமுற்றது. அல்லது சாரியை பெறாது புணர்ந்து எனக் கோடலுமாம். வேலத்து ஆழ்சினையுமாம்.

  
"செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே 
  
 வன்புறை குறித்தல் தவிர்ச்சி யாகும்"  (தொல். கற். 46)  

என்பதுபற்றி இது பாலையாயிற்று.

(256)
  
    திணை : குறிஞ்சி.

    துறை : இது, தோழி தலைமகனது ஏதஞ்சொல்லி வரைவு கடாயது.

    (து - ம்.) என்பது, இரவுக்குறிவருந் தலைமகனைத் தோழி நெருங்கி. 'நாடனே! எம்மை அருளாயாகிச் சிறுநெறியிலே சிங்க முதலாயின இயங்குதலறிந்து வைத்தும் நடுயாமத்தில் வாராநின்றனை; இதற்கு யான் வருந்துகின்றேன்' என இரவுக்குறி மறுத்து வரைவுடன்படுமாறு கூறாநிற்பது.

    (இ - ம்.) இதனை, "களனும் பொழுதும் . . . . . அனிநிலை வகையான் வரைதல் வேண்டினும்" (தொல். கள. 23) என்பதனால் அமைத்துக்கொள்க.

    
விளிவில் அரவமொடு தளிசிறந்து உறைஇ 
    
மழையெழுந்து இறுத்த நளிர்தூங்கு சிலம்பின் 
    
கழைஅமல்பு நீடிய வானுயர் நெடுங்கோட்டு 
    
இலங்குவெள் அருவி வியன்மலைக் கவாஅன் 
5
அரும்புவாய் அவிழ்ந்த கருங்கால் வேங்கைப் 
    
பொன்மருள் நறுவீ கன்மிசைத் தாஅம் 
    
நன்மலை நாட நயந்தனை அருளாய் 
    
இயங்குநர் மடிந்த வயந்திகழ் சிறுநெறிக் 
    
கடுமா வழங்குதல் அறிந்து 
10
நடுநாள் வருதி நோகோ யானே.